புகைபிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
புகைப்பதால் உண்மையில் உற்சாகமோ, ஆர்வமோ, புத்துணர்ச்சியோ ஏற்படுவதில்லை. மாறாக இருக்கும் மன அழுத்தத்தை மேலும் அதி கரிக்கவே செய்கிறது. நுரையீரல் பாதிப்பு, புற்று நோய், மாரடைப்பு உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் விளைவுகளையே உருவாக்குகிறது என்கிறது அறிவியல் ஆய்வுகள். உண்மையில் புகைக்கும் போது புகையில் இருக்கும் நிகோடின் மூளையில் உள்ள டோபமைன் திரவத்தைத் தூண்டி சுரக்கச் செய்கிறது. அதன் விளைவாக உற்சாகம், புத்து ணர்ச்சி போன்ற போலியான நிலையை தற்காலிக மாக உருவாக்குகிறது. இந்த மாயைக்கு அடி மையாகி, விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவாரைப் போல புகைத்து உயிரை மாய்க்க முற்படுகிறோம்.
1998-ஆம் ஆண்டில் இந்தியாவில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.9 கோடி யாக இருந்தது. 2021ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி புகையிலையைப் பயன்படுத்துவோர் 26 கோடியாக அதிகரித்திருக்கின்றனர். அதில் ஆண்கள் 42.4 சதவிகிதம் பேர், பெண்கள் 14.2 சதவிகிதம் பேர். இதில் புகைபிடிப்பது மட்டுமின்றி, புகையிலை பொருட்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலமும் மன நோயாளியாகவே மாறி வருகின்றனர்.
அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தா லும், புகையிலை பயன்பாடு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதற்குக் காரணம் மக்கள் மட்டு மல்ல, அரசும்தான். சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தியை ஏன் நேரடியாக அர சால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு பட் ஜெட்டிலும் சிகரெட் விற்பனை மீதான வரியை உயர்த்துவது மட்டுமே புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாக புகைபிடிப்பவர்களிடம் அரசும் தனது பங்கிற்குச்சுரண்டுவதாகவே அமையும்.
இந்தியாவில் 13 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களில் 8.5 சதவிகிதம் பேர் புகைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் 4 சதவிகிதம் பேர் புகைபிடிப்பவர்களாகவும், 4 சதவிகிதம் பேர் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்கிறது புள்ளி விபரங்கள். இது அவர்களுக்கு மட்டும் கேடு அல்ல, நாட்டுக்கும்தான். ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்களைச் சுத்தப்படுத்துவதற் காக இந்தியா 766 மில்லியன் அமெரிக்க டாலர்க ளைச் செலவு செய்கிறது. இது நாட்டிலுள்ள மொத்த குப்பைகளைச் சுத்தம் செய்வதற்குச் செய்யும் செல வில் 10 சதவிகிதம் என்கிறது உலக சுகாதார மையம்.
புகையிலை மனிதனை மட்டுமல்ல மண்ணை யும் மலடாக்குகிறது என்கின்றன ஆய்வுகள். புகையிலை செடிகள் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தை அதிகளவில் எடுத்துக்கொள்கின் றன. இதனால் மண்ணின் சத்துகள் குறைந்து மண்ணும் மலடாகும் நிலையும் உருவாகிறது என்கின்றன ஆய்வுகள். ஒட்டு மொத்தத்தில் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளியாகும்.