headlines

img

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில்தான் இனிமேல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலை வரால் நியமிக்கப்படுவார்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை  உச்ச நீதிமன்றம் அளித் துள்ளது. இந்த தீர்ப்பை அநேகமாக பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னாள் தலை மைத் தேர்தல் ஆணையர் ஒய்.எம்.குரேஷி உள் படப் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். 

இப்படி ஒரு ஏற்பாட்டைப் பல  ஆண்டுகளா கத் தேர்தல் ஆணையமே கோரி வந்துள்ளது. அநே கமாக டாக்டர் எம்.எஸ். கில். தலைமைத் தேர்தல்  ஆணையராக இருந்தபோது இந்த கருத்து வலுப் பெற்றது. தேர்தல் ஆணையர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் குறித்தோ அல்லது தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தோ  முடிவெடுக்கும் போது அரசாங்கத்தின் பதிலையும் எதிர் வினையையும் எதிர்நோக்காமல் இருக்கவேண்டும். அதற்கு இத்தகைய ஏற்பாடு நிச்சயம் பலனளிக்கும். 

தேர்தல் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் அது நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தின்படி தான் நடைபெற வேண்டுமே தவிரத் தலைமைத் தேர்தல் ஆணை யரின் பரிந்துரையின் பேரில் இருக்கக்கூடாது, இவர்களின் பதவி உயர்வு என்பது குறிப்பாக ஆணையர்களாக இருப்பவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கும்போது பணி மூப்பு அடிப்படையில் இருக்கவேண்டுமே தவிர ஆளுங்கட்சியின் விருப்பு வெறுப்பு அடிப்படை யில் இருக்கக்கூடாது அதற்கு இந்த தீர்ப்பு உதவும்.

தேர்தல் ஆணையத்திற்கு என்று சுதந்திர மான அலுவலகம், ஆட்சியை உருவாக்கும் அதி காரங்கள் மற்றும் ஒரு சுயேச்சையான  நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்)  இருக்க வேண்டும்,  ஆணை யத்தின் செலவுகளுக்காக  நிதி மற்றும் ஒப்புத லுக்காகப் பிரதமர் அலுவலகம் அல்லது சட்ட அமைச்சகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக,  ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நேரடியாகப்  பெறுவதற்கான ஏற்பாடு இருக்கவேண்டும். பல நாடுகளில் இந்த ஏற்பாடு இருக்கிறது.  இது தேர்தல் ஆணையத்தை ஒரு அமைப்பாக வலுப் படுத்தும்.  

இந்திய உச்ச நீதிமன்றம் நாட்டின் அரசியல் அதிகாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த மையமாக உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரச்ச னையும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குரிய விஷய மாக மாறியுள்ளது. தற்போதுள்ள முறையில் கூட சில தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சிறப்பா கச் செயல்பட்டுள்ளனர். ஆனால் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் இந்தமுறை குலைக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஜனநாயகம், தேர்தல் அமைப்பு முறை ஆகிய வற்றைப் பாதுகாக்க அளிக்கப்பட்ட  தீர்ப்பாகக் கருதப்படவேண்டும்.