headlines

img

மனதின் குரலும் - திருக்குறளும்

ஊடகங்களை பெரும்பாலும் சந்திக்காம லும், நாடாளுமன்ற விவாதங்களுக்கு பதிலளிக்கா மலும் ஒன்பதாண்டு கால ஆட்சியை ஓட்டி  விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதை சமாளிப்ப தற்காக மனதின் குரல் என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு முதல் வானொலியில் பேசி வருகிறார் பிர தமர். இதனுடைய நூறாவது நிகழ்ச்சி இம்மாத இறுதி ஞாயிறன்று வரப்போவதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் புளகாங்கிதமாக கட்டுரை எழுதியுள்ளார்.

வானொலியில் ஒலிபரப்பாகும் பிரதமரின் பேச்சின் போது யாரும் எதிர்க்கேள்வி கேட்க முடியாது. அவர் பேசியதை விருப்பமிருந்தால் கேட்கலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். இதுதான் அந்த நிகழ்ச்சியின் ‘சிறப்பு’. ஆனால் மக்களுடன் இந்த நிகழ்ச்சியின் மூலம் நேரடி யாக பிரதமர் தொடர்பு கொண்டுள்ளார் என்று அனுராக் தாக்கூர் உணர்ச்சி வசப்படுகிறார். 

இது வரை ஒலிபரப்பாகியுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியை தொகுத்து பார்த்தால் சில தனி மனித சாதனைகளை பிரதமர் மோடி புகழ்ந்துரைப்பார். தன்னுடைய ஆட்சியின் சாதனைகளாக சில வற்றை புனைந்துரைப்பார். மற்றபடி நாடு சந்திக் கும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் வாய் திறக்க மாட்டார். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்த லின் போது அளித்த வாக்குறுதிகள் எத்தனை? அதில் நிறைவேற்றப்பட்டவை எத்தனை? என்று இதுவரை அவர் எந்த  இடத்திலும் பேசியதேயில்லை. மனதின் குரல் நிகழ்ச்சியில் மறந்தும் கூட அவர் தனது வாக்குறுதிகள் குறித்து பேசுவதேயில்லை.

பிரதமர் மோடி அரசு ஒவ்வொரு பொதுத்துறை யாக காலி செய்து வருகிறது. இந்தியாவுக்கு என்று சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத பெரு மையை உருவாக்கியது  இவர் ஆட்சி. ரயில்வேத் துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியா ருக்கு தாரை வார்த்து வருகிறது ஒன்றிய அரசு. மத்திய செய்தி ஒலிபரப்புத்துறையும் தன்னுடைய பலத்தை இழந்து வருகிறது. காலப்போக்கில் இந்த துறையும் இல்லாமல் போகும் நிலை ஏற்படக் கூடும்.

ஆனால் பிரதமருக்கு கவலையில்லை. கார்ப்பரேட் ஊடகங்களை வளைத்து தன்னு டைய நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற கலையை அவர் அறிவார். ஆனால் நாட்டின் இறையாண்மை கேள்விக்குள்ளாகும் போது தனியார் ஊடகங்கள் என்ன நிலை எடுக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

தடுப்பூசித் திட்டம் வெற்றி பெற்றதற்கு கார ணமே பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிதான் என்கிறார் ஒன்றிய அமைச்சர். ஆனால் தடுப் பூசியை இலவசமாக தர முடியாது என பிடிவாதம் பிடித்தது யாருடைய மனதின் குரல் என்பதை  நாடு நன்கறியும். ஆனால் வெற்று விளம்பரங்க ளும், ஆரவாரங்களும் மக்களுக்கு பலன் தராது. மனதின் குரலுக்கு 

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுலநீர பிற’ 

 

- என்ற திருக்குறளையே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.