அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட அமைப்பு களை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினால் நடத்தப் பட்டுள்ள விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்து ழைக்க அவர் தயாராகயிருந்த நிலையில், தொடர்ந்து 24 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் பின்னிரவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் அமலாக்கத் துறை கடுமையான மனித உரிமை மீறலில் ஈடு பட்டுள்ளது. அவருக்கு தேவையான சட்ட உதவி யும், மருத்துவ உதவியும் தடுக்கப்பட்டுள்ளது. நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். இந்தளவுக்கு கெடு பிடி காட்ட வேண்டிய அவசியம் என்ன?
துணை ராணுவப் படையை குவித்து தலை மைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அறையிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பாது காப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளது கடுமையான ஒன்றாகும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மீது மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு ஏவி விடப்படுகின்றன. மாநில உரிமைகள் மட்டுமின்றி, குறைந்தபட்ச மனித உரிமைகளும் கூட காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. ஜம்மு- காஷ்மீர், கேரளா, தில்லி, மகாராஷ்டிரம், தெலுங்கானா, கர் நாடகா உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அத்து மீறி தலையிடுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலை யில் ஒன்றிய ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள மமதையில் நரேந்திர மோடி அரசு அத்துமீறி ஆட்டம் போடுகிறது. ஜனநாயகத்தை இழிவுபடுத்துகிறது.
அதானி மீது ஹிண்டன் பர்க் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை பரிசீலிக்க வேண்டுமென நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அம லாக்கத்துறையிடம் மனு அளிப்பதைக்கூட ஒன்றிய அரசு தடுத்தது. குஜராத் இனப் படு கொலை தொடர்பான உண்மைகளை வெளி யிட்ட பிபிசி அலுவலகங்கள் மீது வருவான வரித் துறை ஏவிவிடப்பட்டது. தமிழகத்தில் தங்களது மாய்மாலங்கள் எடுபடாத ஆத்திரத்தில் மோடி அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.