பாஜக எம்பிக்களின் வாராந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி களை வசைபாடியுள்ளார். மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக் கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அவைக்கு வந்து பேசுவதற்கு துணிவில்லாத மோடி அவர்களது கட்சியினரின் கூட்டத்திலேயே ஜம்பமாக பேசியிருக்கிறார்.
இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக் கற்ற எதிர்க்கட்சியினரை பார்க்கவில்லை என்று பேசியிருக்கும் மோடி, ‘இந்தியா’ என்ற எதிர்க் கட்சிக் கூட்டணியின் பெயரையும் கிண்டலடித் திருக்கிறார். கிழக்கிந்திய கம்பெனி, முஜாகிதீன் இந்தியா போன்ற பெயர்களில் கூட இந்தியா இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழி கள், மதங்கள் கொண்ட நாடு, துணைக் கண்டம். இதில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்மைத் துவம் உயர்ந்ததாக ஒருங்கிணைப்பதாக விளங் குகிறது. ஆனால் பாஜகவின் எஜமான அமைப் பான ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளோ இந்து ராஷ்டிரா என்கிற ஒற்றைத்தன்மையை திணிக்க முயற்சிக்கிற மதரீதியிலான ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது.
அதனால்தான் ‘இந்தியா’ என்கிற பெயர் மோடிக்கும் அவரது எஜமானர்களுக்கும் உறுத்த லாகவும், எரிச்சலாகவும், அச்சுறுத்தலாகவும் தெரிகிறது. அதனால்தான் ‘இந்தியா’ என்கிற பெயரை வைத்துக் கொண்டு தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள் என்று எதிர்க்கட்சி களை மோடி கேலி செய்திருக்கிறார்.
இதுவரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையையே தங்களின் பலமாகக் கொண்டிருந்த பாஜக தற்போது ஓரணியில் இணைந்து செயல் படத் துவங்கியதும் அச்சமும் பயமும் கொண்டு, இந்த கூட்டணி கரை சேராது; புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு கலைந்துவிடும் என் றெல்லாம் தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள். ஆனால் எதிர்க்கட்சிக ளின் கூட்டணி ஒரு தெளிவான இலக்கோடும், கொள்கையோடும் முன்னேறிச் செல்லும் வழி யினை கண்டிருப்பதால் இப்போது பாஜகவுக்கு அடிவயிற்றை கலக்குகிறது. அதனால்தான் இவ்வாறு பிரதமர் மோடி அலறியிருக்கிறார்.
மோடியை எதிர்ப்பதையே ஒற்றைக் கொள் கையாக கொண்டிருப்பதாக கூறும் அவர் எதிர்க்கட்சிகளால் வெல்லப்பட முடியாதவர் என்று தனக்குத்தானே முதுகில் தட்டிக்கொ டுத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து பேசுவதற்கு பயந்துகொண்டு கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் இப்படி பேசியிருக்கிறார். மணிப்பூர் பற்றி வெறும் 36 வினாடிகள் மட்டுமே பேசிய மோடி நாடாளு மன்றத்தில் பேச 56 அங்குல மார்பின் தெம்பும், திராணியும் எங்கே போனது? நாட்டு மக்களுக்கு ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மதச் சார்பின்மையும், ஜனநாயகமும் அமைதியும் முக்கியமானது. அதனால் அறப்போராட்டம் நிச்சயம் வெல்லும்.