ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டம் தமிழ கத்தில் மேலும் இருவரை பலி கொண்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்ற பொறியியல் பட்டதாரி மாணவர் ப்ரிபயர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த அவர் இணையதளம் மூல மாக கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப செலுத்த முடியாததால் மிரட்டலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
கோவை மாவட்டம் உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் ஆன்லைன் ரம்மிக்கு ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பிடிவாதம் காட்டி வருகிறார். இந்த சட்டத்தில் சில விளக்கங்கள் தேவைப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில அர சின் சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து உரிய விளக்கங்களை அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக் கப்பட்டது என்று தெரிவித்தார்.
அமைச்சர் தெரிவித்த தகவலின் அடிப்படை யில் மிக குறுகிய காலத்திலேயே 25 உயிர்கள் ஆன் லைன் ரம்மியால் பறிக்கப்பட்டுள்ளன. இது ஒரு அப்பட்டமான சூதாட்டம், மோசடி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் இந்த விளையாட்டு திறமையை ஊக்குவிக்கிறது என்றும், அறிவை வளர்க்கிறது என்றும் வாதிடு வோர்களும் மோசடிப் பேர் வழிகளே என்பதில் சந்தேகமில்லை.
ஆளுநருடனான அமைச்சரின் சந்திப்பை தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்.என்.ரவியை சந்தித்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்பு தல் அளிக்க மறுப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வி தமிழக மக்களிடம் எழுந்தது. ஆனாலும் ஆளுநரின் தாமதம் என்பது தொடர்கிறது.
இன்றைக்கு செல்போன் என்பது அன்றாட வாழ்விற்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவ்வாறு செல்போன் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் உள்ளது. இருபதாயிரம் ரூபாய் உள்ளது என ஆன்லைன் ரம்மி சூதாட்டக்காரர்கள் குறுஞ் செய்தி அனுப்பு கிறார்கள். இதை நம்பி உள்ளே செல்பவர்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்து ஓட்டாண்டி ஆகிறார்கள் என சட்ட அமைச்சரே கூறியுள்ளார். ஆனாலும் கூட ஆளுநரின் தாமதம் தொடர்வது அநீதியின் உச்சமாகும். மனித உயிர்களை விட ஆன்லைன் ரம்மி சூதாட்டம் முக்கியம் என்று கரு துவது ஆபத்தான, அழுகிய சிந்தனையாகும்.