தனது பெயரை கெடுக்க வெளிநாட்டு சக்திகள் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அலறி யுள்ளார். போபால் - தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில்சேவையை துவக்கி வைத்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள சிலர் தமது பெயரைக் கெடுக்க 2014ஆம் ஆண்டிலிலிருந்தே செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக பல்வேறு நபர்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பேசியுள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றது முதல் தனது பெயரை இவரேதான் கெடுத்துக் கொண்டு வரு கிறார். இந்த வேலையைக் கூட அவர் அடுத்தவர் களிடம் தருவதில்லை. குஜராத் கலவரத்தில் மோடி மற்றும் அமித்ஷா வகையறாவுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்திய பிபிசி ஆவணப்படம் மற்றும் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானியின் மோசடி குறித்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சதி என்று கூக்குரலிட்டு வருகிறார். ஆனால் முன்வைக்கப் பட்டுள்ள உண்மைகளுக்கு விளக்கமளிக்க அவர் தயாராக இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் அவர் தனது வழக்கமான பாணியை துவக்கி உள்ளார். ஒரு புறத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பக வத் இந்திய - பாகிஸ்தான் பிரிவினை குறித்து பேசு கிறார். இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றது தவறு என பாகிஸ்தானியர்கள் கருதுவதாக அவர் கூறு கிறார். உண்மையில் இந்தியாவை மத அடிப்படை யில் பிளக்க வேண்டும் என முதன்முதலில் குரல் எழுப்பியது ஆர்எஸ்எஸ் பரிவாரம்தான். இருநாடு கோரிக்கைகளை முன்வைத்தவர்கள், தேசப்பிரி வினையை பயன்படுத்தி மக்கள் ஒற்றுமையை கெடுத்தவர்கள், மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமானவர்கள் வரலாற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு பேசத் துவங்கியுள்ளனர்.
மறுபுறத்தில் பிபிசி ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடியினால் மறுக்க முடிய வில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பிபிசி அலு வலகங்களில் வருமான வரித்துறை மூலம் சோத னை நடத்துகின்றனர். மறுபுறத்தில் இது வெளி நாட்டு சதி என பிரச்சனையை மடைமாற்றுகின்றனர்.
அதானி நடத்தியுள்ள மோசடி குறித்து நாடா ளுமன்றம் விவாதிக்கக்கூடாது என்பதற்காகவே ஆளும் கட்சியான பாஜக இரு அவைகளை யும் தொடர்ந்து முடக்கி வருகிறது. வெளிநாட்டில் ராகுல் காந்தி இந்தியாவை இழிவுபடுத்திவிட்ட தாக கூறி அவையை முடக்கின. ராகுல் காந்தி தன் தரப்பு நியாயத்தை நாடாளுமன்றத்தில் எடுத்து ரைக்கக் கூட அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அவசர அவசரமாக அவ ருடைய எம்.பி. பதவியை பறித்துவிட்டனர். இதுதான் ஜனநாயகத்தை மதிக்கும் லட்சணமா?
சுற்றுமுறையில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துவதைக் கூட மோடியின் உலக சாதனை யாக கூறிக்கொள்வது ஒருபுறம். உலகமே மதிக்கும் தலைவராக மோடிஉயர்ந்துவிட்டார் என்று பஜனை பாடுவது. மறுபுறத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அதை திசைதிருப்ப வெளிநாட்டு சதி என ஓலமிடுவது. பாஜகவின் இத்தகைய வழக்கமான தந்திரங்கள் இனியும் பலிக்காது. தொடர்ச்சியான குற்றச்சாட்டு களால் பாஜக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது. இதை மறைக்கவே பிரதமர் மோடி இவ்வாறு பேசத் துவங்கியுள்ளார். இந்த பழைய நாடகம் இனி எடுபடாது.