headlines

img

மீண்டும் ‘ரபேல்’

மணிப்பூர் வன்முறை, தில்லி மற்றும் வட மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஆகியவற்றுக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயண மாக சென்றுள்ளார். கொரோனா முடக்கக் காலத்தில் சற்று தடைபட்டிருந்த அவரது வெளி நாட்டுச் சுற்றுப்பயணம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமரின் பயணத் தின் போது மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெ னவே பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமா னங்களை வாங்கியது குறித்த சர்ச்சை இன்ன மும் முடியவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு விமானம் 628 கோடி என முடிவு செய்யப்பட்டு 126 ரபேல் போர் விமானங்களை 79 ஆயிரத்து 200 கோடிக்கு வாங்க உடன் பாடு எட்டப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு விமானத்தை ரூ.1,635 கோடிக்கு வாங்க முடிவு செய்து உடன்பாடு செய்யப் பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் இந்த ஊழலை மூடி மறைத்து விட்டதாக ஒன்றிய அரசு நினைத்துக் கொண்டி ருந்த போதும் ரபேல் ஊழல் வழக்கு  விசார ணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பிரான்ஸ் நீதித்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் மேலும் ரபேல் போர் விமானங்களை வாங்கிக் குவிக்க உடன் பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது டிரோன்கள் வாங்க உடன்பாடு செய்யப் பட்டதில் 25 ஆயிரம் கோடி முறைகேடு நடந்தி ருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இப்போது மீண்டும் ரபேல் விமானம் வாங்குவதில் எந்தளவு முறைகேடு நடந்துள்ளது என்பது விரைவில் வெளிவரக்கூடும். கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதானே ஆக வேண்டும்?

வறுமை, வேலையின்மை போன்ற பிரச்ச னைகள் இந்தியாவை சூழ்ந்து நின்றபோதும், ஆயுத இறக்குமதியில் மோடி அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டுகிறது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 11 சதவீதத்தை கொண்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் இந்தியா ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது.

மறுபுறத்தில் ‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்ம நிர்பார்’ என்று படம் காட்டுவதில் மட்டும் குறை வில்லை. 1993 ஆம் ஆண்டு முதலே உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம் படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவு இது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் தனது உள்நாட்டு கார்ப்பரேட் முத லாளிகளின் நலனுக்காகவே என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.