headlines

img

கல்வி, வேலை வாய்ப்பு-யாரை நோக்கி...

மத்திய பட்ஜெட் 2022 கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் ஆக்கப்பூர்வ விளைவு களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

கல்வித்திறன் மேம்பாடு குறித்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், தேச நிர்மாணப் பணிகளில் இளைய தலைமுறையின ரின் முக்கியத்துவம் தேவையானது என்றும், நமது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பது இந்தியா வின் எதிர்காலத்திற்கு அதிகாரமளிப்பதாகும் என்றும் கூறியுள்ளார்.

இவர் பிரதமர் ஆவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார். ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்காதது மட்டுமின்றி ஏற்கெனவே இருந்த வேலைகளை பறித்ததுதான் இவரது அரசு செய்த முக்கியமான வேலை.

கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சமாளிக்க முடியாமல் ஏராளமாக மூடப்பட்டன. அதற்கு முன்பு மோடி அரசினால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மூச்சுத் திணறிக்கொண்டி ருந்த இந்திய பொருளாதாரம் கொரோனா காலத்தில் மூர்ச்சையடைந்தது. இதனால் வேலை வாய்ப்பு அருகிப்போய் இளைஞர்களின் எதிர் காலம் இருள் சூழ்ந்துள்ளது. அதைப் போற்றுவதற் கான எந்தத் திட்டமும் ஒன்றிய அரசிடம் இல்லை.

வேலை வாய்ப்பை உருவாக்காமல் இளை ஞர்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்க முடியும். அதுமட்டுமின்றி தம்முடைய அரசு தரமான கல்வியை உலகமயமாக்கியுள்ளதாகவும், கல்வித் துறையில் மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் மேம் படுத்தப்பட்ட திறமைகளுடன் கல்வியை விரிவு படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்கி வருவதைத் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் திறமை என்று பிரதமர் கூறுவதெல்லாம் அனைவருக்கும் கல்வி என்பதை மறுத்து தகுதி, திறமை என்கிற பெயரில் பெரும்பகுதி மக்க ளுக்கு கல்வி வாய்ப்பை மறுப்பதுதான். இதுதான் இவரது அரசு உருவாக்கிய புதிய கல்விக்கொள்கை யின் உள்ளடக்கம்.

கல்வி என்பது பன்முக வளர்ச்சியை மேம்படுத்து வதாக அமையவேண்டும். ஆனால் தொழிற்சாலை களுக்கு ஏற்ற முறையில் கல்வியின் தரத்தை மேம் படுத்தியுள்ளதாக இவர் கூறுவது, கல்வியை முத லாளிகளின் தேவைக்கேற்ற வகையில் பாடத் திட்டத்தை உருவாக்கி இருப்பதைத்தான். இத னால் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி என்பது பெரும் பின்னடைவை சந்திக்கும்.

பிரதமர் தன்னுடைய உரையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து சிலாகித்துள்ளார். இதன்மூலம் கிராமப்புற, தலித் மற்றும் பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். கிராமப்புற கல்வியை புறக்க ணித்து டிஜிட்டல் மயம் என்கிற பெயரில் மேல்தட்டு பகுதியினருக்கான ஒன்றாக மட்டும் கல்வியை மாற்றிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இருளை ஒளி என்பது பிரதமர் மோடி வழக்கமாக பின்பற்றும் வார்த்தை ஜாலமே ஆகும்.