headlines

img

எரிபொருள் விலை உயர்வும், ஏமாற்று வித்தையும்

இந்தியாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல்- டீசல் விலையைக் குறைக்க மாநிலங்கள் தங்கள் வரிவிகிதத்தை குறைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு பல்வேறு மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு வரியை குறைக்க முன் வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கடந்தாண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது என்றும் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க ஆலோசனை கூறினோம்: ஆனால் எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் வரி குறைக்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனை வருக்கும் முழுமையாக இலவச தடுப்பூசி வழங்கு வது குறித்தோ, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்தோ பேசியிருக்கலாம். ஆனால் ஒன்றிய அரசின் நடவடிக்கை காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற் றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்களி டம் ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்பி மாநில அரசுகள் மீது பழி போட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் விளக்கமளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி முழுப் பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டதாகவும், ஐந்து மாநில தேர்த லுக்கு முன்பு பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பது போல் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தபின் விலையை கடுமையாக உயர்த்தியது ஒன்றிய அரசுதான் என்று குறிப் பிட்டுள்ளார். மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற வுடன் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மோடி அரசு பதவியேற்ற பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரி 200 சதவீதம், டீசல் மீதான வரி 500 சதவீதமும் ஒன்றிய அரசினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி மாநில அரசுகளை பொருத்தமற்ற முறை யில் கைகாட்டுகிறார்.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை இயன்ற அளவு ஏற்கெனவே குறைத்துள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களும் வரிக் குறைப்புச் செய்துள்ளன. மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநில முதல்வர்களும் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி நிலு வையையும் ஒன்றிய அரசு முறையாக கொடுப்ப தில்லை. கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் பல்வேறு வரிகள் மூலம் எரிபொ ருள் விலை குறையாமல் பார்த்துக்கொண்ட பாஜக கூட்டணி அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இலவச உபதேசம் வழங்குவது வெறும் ஏமாற்று வேலையே அன்றி வேறல்ல.