மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்காக இரவு, பகலாக பாடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக அவரது அரசு ஏழைகளை ஒழித்துக் கொண்டி ருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய காரணங்க ளால் ஏழை இந்தியர்கள் வாழ்வு மிகக் கடும் நெருக் கடியில் சிக்கி இருக்கிறது. குறிப்பாக பரம ஏழைக ளாக இருக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களு க்கு குறைந்தபட்ச உணவு அளிக்கும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தைக் கூட தமிழ கத்திற்கு சுமார் 4 மாதங்களாக இந்த அரசு விடு விக்கவில்லை.
நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி ரூ.1000 ரூ. 500 பணத்தாள்கள் செல் லாது என்று அறிவித்து கடந்த 8ஆம் தேதியுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பயங்கரவாதிக ளுக்கான நிதியாதாரத்தை அழிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அப்போது அவர் கூறினார்.
அவரது கூற்று தவறானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது. அவர் சொன்ன கருப்புப் பணம் ஒழியவில்லை, கள்ளப்பணம் ஒழிக்கப்படும் என்று சொன்னவர்கள் புதிதாக வெளியிட்ட ரூபாய் 2000 பணத்தாள்களையும் நீக்கிவிட்டனர். ஆகவே கள்ளப் பணம் ஒழிய வில்லை என்பது தெரிகிறது.
மோடி அரசு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்த பண மதிப்பு நீக்கத்தின் அடிப்படை யான நோக்கம் கார்ப்பரேட்டுகளின் விருப் பத்தை நிறைவேற்றுவது என்பதே. சாமானிய, ஏழை, எளிய மக்கள், பெண்களிடம் சிறுசேமிப் பாக இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டும் இன்றி நடுத்தர, சிறு, குறு தொழில் துறையினர், வர்த்தகர்களின் பணப்புழக்கமும் அடித்து வீழ்த்தப்பட்டது. அப்போது தடுமாறி கீழே விழுந்தவர்கள், இப்போது வரை மீண்டு எழவே முடியவில்லை. தமிழ்நாட்டில் வந்தாரை வாழவைக்கும் நகரம் என பெயர் பெற்ற திருப்பூ ரின் தற்போதைய நிலையே இதற்கு சாட்சி!
மிகப்பெரும் கார்ப்பரேட் தொழில் குழுமங்க ளிடம் மென்மேலும் செல்வம் குவிந்து வருகிறது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கி றார்கள். இந்த இடைவெளியை அதிகரித்து, முரண்பாட்டை மென்மேலும் கூர்மைப்படுத்தி யதே மோடி அரசின் பிரதான சாதனை. ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் ஏழைகளுக் காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மோடி பிரச்சாரம் செய்வதை இந்திய மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.