headlines

img

சொல் ஒன்று செயல் வேறு

கொரோனா வைரஸின் புதிய உருமாற்றத்து க்கு எதிரான போரில் தனிமனிதர்களின் விழிப்பு ணர்வும், ஒழுக்கமும் நாட்டின் மிகப்பெரிய வலிமை யாக இருக்கும் என்று  மனதின் குரல்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தடுப்பூசி செலுத்து வதில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய சாதனையைப் படைத்து விட்டது என்றும் அவர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை.  உண்மையில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் 47 கோடியே 95 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். இந்த மிகப்பெரிய இடைவெளி ஆபத்தானது.

நாட்டில் இதுவரை  59 கோடி பேருக்கு மட்டுமே  இருதவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட இன்னும் ஓராண்டா கும்.  தற்போது உருமாறிய  ஒமைக்ரான் வைரஸ்  மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.  நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இதன் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இதற்கு இலக்காகின்றனர். 

ஆனால் நாட்டின் பிரதமரோ பெருந்தொற்று பரவலைத் தடுக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கிறார். அடுத் தாண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடை பெறவுள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் பாஜக வுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துள் ளதால் வாரத்திற்கு இரண்டு முறை தில்லியிலி ருந்து அம்மாநிலத்திற்குப் பிரதமர் பறந்துகொண்டி ருக்கிறார். புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வதுமாய் இருக்கிறார். கொரோனா கட்டுப்பாடு களை மீறி ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி வைத்து கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கி றார். 

கொரோனா தொற்று முதல்முறையாக உலகில் படுவேகத்தில் பரவிக்கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காமல் நடத்திக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சிகள் எச்சரித்த போதும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை  இழக்கவேண்டியதாயிற்று. 

நாட்டில் ஏற்கனவே கோவேக்சின்,  கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்  உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவோவேக்ஸ் தடுப்பூசியைக் கூடுதலாக அங்கீ கரித்துள்ளது. அவசர நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் அந்தத்தடுப்பூசியை இந்திய மக்களுக்குச் செலுத்த அனுமதி அளிக்காத மோடி அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிய ளித்துள்ளது சரியல்ல. 

பெருந்தொற்றை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி விரைவாகச்  செலுத்தப்படுவதை  ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கோவோவேக்ஸ் தடுப்பூசியை நாட்டுமக்களுக்கு செலுத்த அனு மதிக்க வேண்டும்.