பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடாத செயல்பாடாக இருப்பது மாதம் ஒருமுறை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுவதே, ஞாயிறன்று (செப்.25) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விலங்குகளிடம் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர் பாக கருத்துத் தெரிவிக்கும் போட்டியும் அரசின் வலைத்தளம் வாயிலாக நடைபெறவுள்ளது என்றும் அதில் தவறாமல் மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதமரின் விலங்குகள் மீதான அன்பு நம்மை நெகிழ வைக்கிறது. அதற்கு கடந்த காலத்திய அவரது செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அவரது மாளிகைத் தோட்டத் தில் மயிலோடு விளையாடி மனம் மகிழ்ந்திருந்த காட்சியை, காட்சி ஊடகங்களும் சமூக ஊட கங்களும் எடுத்துக் காட்டி அவரது புகழ் பரப்பியதை நாட்டு மக்கள் கண்டு களித்திருந் தோமே! அவரது மயில்நேயம் நம்மை மயிர்க்கூச்செரிய வைத்ததே!
இன்னும் சில காலம் பின்னோக்கிச் சென் றால், அவர் பிரதமரான துவக்கக் கால கட்டத் தில், குஜராத் சிறுபான்மை மக்கள் படுகொலை (2002) குறித்து அனுதாபம் கூடத் தெரிவிக்க வில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறிய பதில் கண்கலங்க வைத்ததை நாம் பார்த்ததில்லையா?
காரில் போகும்போது சாலையில் ஒரு நாய் அடிபட்டால் கூட நாம் அனுதாபம் தெரிவிப்ப தில்லையா என்று எதிர்க் கேள்வி கேட்டு செய்தி யாளர்களின் வாயடைக்க வைத்தாரே அந்த நாய் நேயத்தை நாம் புறந்தள்ள முடியுமா?
பசுக்களைப் பாதுகாப்பதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாது பிற மாநி லங்களிலும் பசுக்காவலர்கள் எனும் பெயரி லான குண்டர் படை மனிதர்களை அடித்துத் துவைத்து துன்புறுத்தி உயிரைக் காவு வாங்கி யதை கண்டு கொள்ளாமலேயே இருந்தாரே அந்த பசுநேயம் எத்தகைய பாசத்துக்குரியது?
மனிதர்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும் என்ற இந்தியக் கொள்கையை சர்வ தேச அளவுக்கு கொண்டு சென்றவர் என்று தீன தயாள் உபாத்யாயவை மனதின் குரலில் புகழ்ந்து ரைத்திருக்கிறார் பிரதமர் மோடி. உபாத்யாய என்ன, நம் பிரதமரே 2002 காலத்தில் குஜ ராத்தில் சிறுபான்மை மக்கள் மீது ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரங்கள் நடத்திய படுகொலைகள் கண்டு இந்தியாவே தலைகுனிந்ததே. அப்போ தைய பிரதமர் வாஜ்பாய், இனி எந்த முகத் தோடு வெளிநாடு செல்வேன் என்று புலம்பி னாரே! அமெரிக்கா கூட அந்தச் சமயத்தில் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு மோடிக்கு விசா வழங்க மறுத்து விட்டதே, அதை விடவா தீன தயாள் சிறப்பாக உணர்த்தியிருப்பார்.
புலிகள், மயில்கள், நாய்கள், பசுக்கள் போன்ற விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது இருக்கட்டும், மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற போட்டியை நடத்துங் கள். அதன்படி நடந்து கொள்ளச் சொல் லுங்கள்.