ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 3ஆயிரம் பக்க குற்றப் பத்திரி கையை தாக்கல் செய்துள்ளனர். இந்நிறுவனம் ரூ.1லட்சத்திற்கு ரூ.15 ஆயிரம் அளவிற்கு வட்டி தருவதாக ஏமாற்றி ரூ.2ஆயிரத்து 438 கோடி அள வுக்கு மோசடி செய்துள்ளது.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவ ரான ஹரிஷ் என்பவர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கட்சியைச் சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட சிலர் தலை மறைவாகிவிட்டனர்.
ஹரிஷ் என்பவர் பாஜகவில் சேருவதற்கு பெரும் தொகை கொடுத்துள்ளார். இந்த மோசடி வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளது என்று புகார் எழுந்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே இந்த குற்றச்சாட்டை எழுப்பினர்.
சாதாரண தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி பெருந்தொகை சுருட்டப் பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், மோசடி யில் தொடர்புடைய அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக ஹரிஷ் உடன் தொடர்புடைய பாஜக வினர் விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.கே.சுரேஷ் விவகாரமும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும்.
மோசடி செய்த பணத்தில் பாஜகவின் விளை யாட்டுப்பிரிவு மாநிலப் பொறுப்பை பெறுவ தற்காக பாஜகவைச் சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்ததாக ஹரிஷ் தெரிவித்திருந்தார். இதேபோல பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், ராணிப் பேட்டை பாஜக பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகியோரி டமும் விசாரணை நடைபெற்றது.
ஊழலுக்கெதிரானவர் போல பாஜக மாநி லத்தலைவர் அண்ணாமலை அன்றாடம் சண்டமாருதம் செய்கிறார். ஆனால் ஆருத்ரா கோல்டு பைனான்ஸ் மோசடி பாஜக அலுவல கத்தையே சுற்றி வருகிறது. அந்தக் கட்சியிலி ருந்து விலகிய பொருளாதாரப் பிரிவின் மாநிலச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ண பிரபு என்பவர் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பாஜக தலைமைக்கு நெருக்கமாக இருப்பதா கவும், இது தமக்கு பெரும் மன உளைச்சலை உருவாக்கியதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆருத்ரா கோல்டு பைனான்ஸ் மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படு வதோடு பாஜக மாநில தலைமைக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பு இருக்குமானால் முழுமை யாக கண்டுபிடிக்க வேண்டும். இதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட அனைவரும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள். அவர்களுக்கு நீதியும், இழந்த நிதியும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.