இந்தியாவில் உள்ள வளரிளம் பெண்கள் 10 பேரில் 6 பேர் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டி ருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் தரவுகளைப் பயன்படுத்தி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் இணை ந்து மேற்கொண்ட ஆய்வில் இது உறுதி செய் யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நமது இளைய சமூகத்தின் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக் கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியத் துடன் இணைந்தது. நாட்டு மக்கள் நலிவடைந்து கொண்டிருக்கும் போது ஒரு போதும் உண்மை யான வளர்ச்சியைக் காண முடியாது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 47 சதவிகிதம் பேர் தாங்கள் செலுத்தி வந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பாதியில் நிறுத்தியிருக்கின்றனர். அதிலிருந்து எடுத்த பணத்தையும் அத்தியாவசியத் தேவைக ளுக்கே பயன்படுத்தியிருக்கின்றனர்.
விலைவாசி உயர்விற்கேற்ப ஊதியம் உயர வில்லை. உயிர்வாழத் தேவைப்படும் உணவின் விலை 65 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் ஊதியமோ 37 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டி ருக்கிறது. இதில் ஏற்பட்டிருக்கும் 28 சதவிகித பற்றாக்குறையை சாதாரண மக்கள் எப்படி சமா ளிக்க முடியும் ? உணவின் அளவைக் குறைக் கின்றனர்; ஊட்டச் சத்துமிக்க உணவுக்குப் பதி லாகப் பசியைத் தீர்த்தால் போதும் என்ற நிலைக் குத் தள்ளப்படுகின்றனர். அப்படியிருப்பின் எப்படி சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்வை எட்ட முடியும் ?
2015 -16 இல் ரத்தச் சோகை பாதிப்பிற்கு உள்ளான மாநிலங்களின் எண்ணிக்கை 5ஆக இருந்தது. 2019 -21 இல் 60 சதவிகிதம் அதிகரித்து 11 மாநிலங்களாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக சமூகரீதியாக- பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள்தான் மற்றவர்களை விட அதிகளவில் ரத்தச் சோகை யால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடியோ, இந்தியா வளர்ந்து கொண்டிருக்கி றது; உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறப்போகிறோம் என வெற்றுத் தம்பட்டம் அடிக்கிறார்.
2014-2021 ஆண்டுகளுக்கு இடையே தினக் கூலி வேலை செய்யும் ஆண்களின் தற்கொலை எண்ணிக்கை 170.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக உழைப்பை நல்கும் 30-44 வய தினரின் தற்கொலை எண்ணிக்கை 33.5 சதவிகித மாக அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள 45.8 சதவீதச் சொத்துகள், வெறும் 1.1 சதவீதப் பணக்காரர்களின் கையில் உள்ளது. அதே சமயத்தில், 45.8 சதவீத இந்தியர்கள் ஒட்டு மொத்தமாக நாட்டின் 1.2 சதவீத சொத்துகளைத் தான் வைத்திருக்கின்றனர். மோடி ஆட்சி யில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அருவருக் கத்தக்க அசமத்துவம் எப்படி இந்திய இளைய சமூகத்தைப் பாதுகாக்க உதவும்?