headlines

img

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே நியாயமானது

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தென்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி அகற்றப் பட்டு அவசரநிலை நடைமுறையில் இருந்த காலத்தில்தான் கல்வி மாநில மற்றும் ஒன்றிய அரசு களின் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றிய பட்டியலுக்கு கல்வித்துறை மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. 

குறிப்பாக மோடி ஆட்சியில் உயர்கல்வித் துறை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தின்கீழ் மாற்றப் பட்டுக் கொண்டே இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து கல்விப் புலங்களை யும் ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றும்  வகையிலேயே தேசிய புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. 

மருத்துவம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்பு களுக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது மாநில அதிகாரங்களை பறிப்பதே ஆகும். இதன் நேரடி விளைவுகளை நிர்ப்பந்த மான நீட் தேர்வை புகுத்தியதன் மூலம் தமிழகம் போன்ற மாநிலங்கள் அனுபவித்துக் கொண்டிருக் கின்றன.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டி யதன் அவசியம் என்ன என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார். ஒன்றிய அரசு தனது அதி காரத்தைப் பயன்படுத்தி பிற்போக்கு கருத்துக்களை பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளது முழு உண்மை. 

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தன்னுடைய கருத்தியலின் அடிப்படையில் புராணங்களை யும், கற்பிதங்களையும், அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணான விசயங்களையும் பாடத்திட்டங்களில் புகுத்தி எதிர்காலத் தலை முறையை விஷமாக்கி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டுமானால் பல்கலைக்கழகங்களிலும் அந்தந்த மாநிலங்களின் கருத்தோட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மற்றும் உயர்கல்வி ஆய்வுகள் அமைவது அவசியமாகும். 

அதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள கல்விக்கொள்கையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்கள் செயல்படுவதே பொருத்தமாக இருக்கும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குலக்கல்வி முறையையும், மும்மொழித் திட்டத்தையும் அதிலும் குறிப்பாக சமஸ்கிருத மயமாக்கலையும் குறியாகக் கொண்டு தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வழியாக இது புகுத்தப்படுகிறது. இது தடுக்கப் பட வேண்டுமானால் மாநில அரசுகளின் கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் இயங்குவது அவசியம்.  புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளு நரால் நியமிக்கப்பட்ட சூரப்பா அந்த பல்கலைக்கழ கத்தையே தமிழக அரசிடமிருந்து ஒன்றிய அரசுக்கு மாற்ற முயன்றதைப் பார்த்தோம். இத்தகைய போக்குகள் தடுக்கப்பட கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவது அவசியம்.