headlines

img

ஆளுநர் செய்வது சரியல்ல!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அவர்களின் நெருக் கடியால் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும்  அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.  அவர் கைது செய்யப் பட்டிருப்பதாலும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டால் நீண்ட நாட்கள் செயல்பட முடியாது என்பதாலும் அவரது துறைகளை வேறு அமைச் சர்களுக்கு மாற்றிக்கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுசெய்தார். இதற்கான கடிதங் கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன.  ஆனால் அதை ஏற்க மறுக்கும் ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவ ரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ஒரு அர சியல் கட்சித்தலைவர் போல்  வாதிட்டு வருகிறார்.

“வழக்கு இருக்கும் காரணத்தாலேயே அமைச் சர்கள் பதவி விலக வேண்டும் என்றால் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கிற அமித்ஷா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்காக அவர் நீக்கப்பட்டாரா? அது மட்டுமல்ல,  ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களும் இந்நாள் வரை பதவியில் நீடித்துக் கொண்டுதானே உள்ளனர். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில்இருந்து நீக்கவேண்டும் என்று மே 31 ஆம் தேதியே முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அப்போது அம லாக்கத் துறை சோதனையே நடக்கவில்லை. அப்போதிலிருந்தே செந்தில் பாலாஜியை அமைச் சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ ஒரு  திட்டம் இருக்கிறது.

“முதல்வர் பரிந்துரைப்பவர்களை அமைச் சர்களாக நியமிக்கும் பணியே ஆளுநருடையது. அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்வதை எல்லாம் ஆளுநரிடம் சொல்லி ஒப்புதல் பெற வேண்டும் என்பதில்லை. மாற்றத்தை ஆளுநரு க்கு தெரியப்படுத்தினால் போதுமானது.  அர சியலமைப்பு சட்டம் தெரிந்த ஆளுநர் இந்த விஷயத்தில் இழுத்தடிக்காமல் உடனடியாக ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். கடும் கண்ட னத்திற்கு ஆளான பிறகு அமைச்சர்கள் இலாகா மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘பிரிவு 164’ மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்து என்ன கூறுகிறது? முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்ச ரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நிய மிப்பார். ஆளுநரின் விருப்பமுள்ளவரை அமைச் சர்கள் பதவி வகிக்க முடியும்.

இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதல மைச்சரின் விருப்பம்தான். முதல்வர் விரும்பும் வரையில் தான் அமைச்சர் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என்பதை உணர்த்தத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதை முதல்வ ரின் விருப்பம் அல்லது முதல்வரின் அதிகாரம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.  பல வழக்குகளில் இதுகுறித்து விளக்கப்பட்ட பின்னரும் ஆளுநர் ஏற்க மறுப்பது சரியல்ல.