headlines

img

உண்மையின் பேரொளி

“திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே உள்ளது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது கொள்கைக் கூட்டணி. திமுக ஆட்சிக்கு  தேவையான ஆரோக்கியமான ஆலோசனை களை சிபிஎம் அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘தீக்கதிர்’, ஆட்சியில் நடக்கும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டு கிறது. இந்த ஆரோக்கியமான கொள்கைக் கூட்டணி தொடரும்.”

- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரளாவின் நாளேடான மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்வி களுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மற்றும் தேசிய அரசியல் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீக்கதிர் நாளித ழும் ஆற்றி வரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை இரத்தினச்சுருக்கமாக, அதேவேளை, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் ஓர் உயரிய அரசியல் நெறியோடு வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர். அவரது வார்த்தைகள், ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக - தேசிய அரசியலில் பாஜகவின் நாசகரக் கொள்கை களுக்கு எதிராக - மாநில அரசியலில் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் நலன்களை காப்ப தற்காக - ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியின் குரலாக தீக்கதிர் ஒலித்துக் கொண்டிருக்கிறது; ஜொலித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான மிகச்சிறந்த சான்று ஆகும். 

இன்றைய முதலாளித்துவ ஊடக உலகில் பரபரப்பு அரசியல் செய்திகளும் அரசியலற்ற எண்ணற்ற தகவல்களும் பிரதான இடம்பெறு கின்றன. விளம்பர வணிகமும், அரசியல் மாய்மால முமே கார்ப்பரேட் ஊடக தர்மமாகிவிட்டது. இந்த  நிலையில், 60 ஆண்டு காலமாக, ஒரு கம்யூ னிஸ்ட் கட்சியின் ஏடாக தீக்கதிர் நாளிதழ், முத லாளித்துவ - கார்ப்பரேட் ஊடக நெறிகளுக்கு நேர் எதிராக பயணிக்கிறது. அது எப்போதும் பாட் டாளி வர்க்கத்தின் நலன்களையே பேசுகிறது. 

தமிழகத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளை ஞர்கள், மாணவர்கள், சிறுபான்மை மக்கள்,  மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசின் கவனத்திற்கு தங்களது குறைபாடுகளை, தங்களது உணர்வுகளை கொண்டுசெல்வதற்கு எப்போதுமே தீக்கதிர் நாளிதழ் ஒரு வாகனமாக செயல்பட்டு வருகிறது. ஆட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தரப்பிலும் மக்களின் தரப்பிலும்  இருந்து கவனப் படுத்த வேண்டிய எண்ணற்ற பிரச்சனைகளை இடைவிடாமல் கொண்டுசெல்கிறது. முத லமைச்சர் கூறியபடியே, பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும்  உதவியிருக்கிறது.  தேசநலனைப் பாதுகாக்கவும் எளிய மக்களின் நலன்களை பாதுகாக்கவுமான கொள்கைக் கூட்டணியை வலுப்படுத்தும் விதத்தில், வைரவிழாவை எட்டியுள்ள தீக்கதிர் உறுதியோடு பீடுநடை போடும்.