உ.பி.மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கவோ, வளர்ச்சிக்கு வழி வகுப்பதாகவோ அமைய வில்லை. மாறாக, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் -பாஜக வகையறாவுக்கு ஆள்பிடிக்கும் நிகழ்ச்சி யாகவே அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை காசி பல்கலைக்கழகமும் சென்னை ஐஐடி நிறுவனமும் இணைந்து நடத்து வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தொன்மையான தமிழ் மொழியை பாது காப்பது இந்தியாவின் 130 கோடி மக்களின் கடமை என்று கூறியுள்ளார். ஆனால் இவரது தலைமை யிலான ஒன்றிய அரசு தமிழை தள்ளி வைத்து இந்தி, சமஸ்கிருத திணிப்பிலேயே கவனம் செலுத்துகிறது. இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக அறிவித்திருந்தால் அவரது சொல்லுக்கும் செய லுக்கும் இடைவெளியில்லாமல் அமைந்திருக்கும்.
இந்த நிகழ்வில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிவபெருமானுடைய திரு வாயிலிருந்து உருவான மொழிகள் சமஸ்கிரு தமும், தமிழும் என்று கூறியுள்ளார். ஒரு வாதத் திற்காக இதை ஒத்துக் கொண்டால் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ் வளர்ச்சிக்கு கிள்ளிக் கூட கொடுக்கவில்லையே ஏன்? சிவனின் ஒரு வாய்க்கு அவலும், ஒரு வாய்க்கு உமியும் தருவது நியாயம் தானா?
இந்த நிகழ்வில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை தம்மை மேடையில் அமர வைத் ததையே பெருமையாக பீற்றிக் கொள்கிறார். மாறாக, தன்னுடைய தாய்மொழியான தமிழுக்கு ஒன்றிய அரசின் அரியாசனத்தில் சரியாசனம் தராதது குறித்து இவருக்கு உறுத்தல் இல்லை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’- என சமத்துவம் பேசிய வள்ளுவரையே சனாதன குடு வைக்குள் அடைத்து காவிச்சாயம் பூச முயல்ப வர்கள் இப்போது ஒட்டு மொத்த தமிழ் மொழிக் குமே மதச்சாயம் பூச முயல்கிறார்கள்.
‘என்றுமுள தென்தமிழ்’ - என்று புகழப்படும் உலகின் உயர்தனி செம்மொழிகளில் ஒன்றான தமிழ், காலப்புயல்களை தாண்டி நிலைத்து நிற்பதற்கு காரணம் எந்தவொரு மதத்தோடும், சாதியோடும் அது பிணைக்கப்படாமல் இருப்பது தான். வேறு வார்த்தையில் சொல்வதானால் எல்லா மத சிந்தனைகளோடும் இணைந்தும், இயைந்தும் தமிழ் தன்னை வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. மதத்தை பரப்ப வந்தவர்கள் கூட தமிழின் இனிமையில் மயங்கி தமிழை பரப்பும் தொண்டர்கள் ஆனார்கள். சமஸ்கிருதத்திற்கு எதிரான மரபையும் வேரையும் தன்னகத்தே கொண்டு வளர்ந்தது தமிழ். தமிழ் அனைவருக் குமானது. அதை கங்கையில் கொண்டு போய் மூழ்கடித்து மூச்சடைக்கச் செய்யும் இவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.