headlines

img

உயர்வைக் கைவிடுக!

ஜூலை 18 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த அன்றே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். 27 விழுக்காடு முதல் மின் கட்டணத்தை உயர்த்தவிருப்ப தாக அறிவித்திருக்கிறார். 

இதனால் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின் கட்டணம் உயரும். ஆனால் 100 வரை இலவச மின்சாரம் தொடரும் என்று கூறியிருந்தாலும் இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக விட்டுக் கொடுக்கலாம் என்று கூறியி ருப்பதன் மூலம் மானியம் ரத்தாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இப்படித்தான் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு மானியத்தில் கை வைத்தது. 

ஆனால் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது என்றும் அதை சரி செய்வதற்காகவும், ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தினாலும் இதை செய்வதாகக் கூறியி ருக்கிறார். இலவச மின்சாரம் வழங்கப்படுவதற் கான தொகையை மாநில அரசு மின் வாரி யத்திற்கு வழங்காததும் ஒரு காரணம். அத்து டன் பற்றாக்குறையான மின்சாரத்தை தனியாரி டம் கூடுதல் விலையில் கொள்முதல் செய்வதும்  இன்னொரு காரணம். 

ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்க ளில் ஏற்கெனவே கூடுதல் விலைக்கு செய்யப் பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு குறைவான விலைக்கு புதிய ஒப்பந்தம் போடப் பட்டது. அத்தகைய நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டிருந்தால் கடன் அதிகரிக்காமல் இருந்திருக்குமே? 

புதிய மின் உற்பத்தி திட்டங்களை திட்டமிட்ட காலத்தில் (2018-20) நிறைவேற்றியிருந்தால் தமிழ கத்திற்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடு தலாக கிடைத்திருக்கும். ஆனால் அதுபற்றிய கவலை ஏதும் முந்தைய அதிமுக அரசுக்கு இல் லாததும், இத்தகைய நிலைக்கு வித்திட்டது. ஆனால் தற்போது இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்து ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டால் நல்லது.

காற்றாலை மின்சாரமும் கூடுதல் விலையி லேயே கொள்முதல் செய்யப்படுகிறது. பணப் பாக்கிக்கான 10 ஒப்பந்த நிறுவனங்கள் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் மின்வாரியம் மீது வழக்கு  தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவற்றையெல்லாம் காரணமாகக் கூறி கட்ட ணத்தை உயர்த்துவது ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளால் சிக்கி சீரழியும் மக்களை மேலும் கீழே அழுத்துவதாகவே உள்ளது.  

ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரியால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே இந்த கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் மாதாந்திர கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்திட வேண்டும்.