headlines

img

சுமூகத் தீர்வு கண்டிடுக!

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற் பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேறு வழியில் லாத நிலையில்தான் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செல வுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த எட்டாண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்துத் தொ ழிலாளர்களுக்கான 15ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். வாரிசு பணி நியமனங்களை வழங்க வேண்டும் என்பன வேலை நிறுத்தம் செய்யும் ஊழி யர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எடுத்த எடுப்பிலேயே கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. தொடர்ச்சி யாக பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த வேலைநிறுத் தத்தை தவிர்ப்பதற்காக அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை தொழிற்சங்கங்கள் நடத்தின.  குறைந்தபட்ச கோரிக்கைகள் கூட ஏற்கப் படாத நிலையில்தான் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத் தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால்தான் எட்டாண்டு காலம் ஓய்வூதியர்க ளுக்கான அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் படும் துயரம் மிகவும் கொடுமையானது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிர்க்கு இலவச பேருந்து சலுகை அறிவிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

அதுபோல மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு போக்குவரத்து கட்டண சலுகை வழங்கப்படுகி றது. போக்குவரத்து ஊழியர்கள் தான் இந்த திட்டங்கள் செயல்பட காரணமாக உள்ளனர். புதிய பணி நியமனங்கள் செய்யப்படவில்லை யென்றால் பணியில் உள்ள தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். பேருந்துகள் ஓடுவது சக்கரத்தினால் மட்டுமல்ல, அதை இயக்கும் தொழிலாளர்களின் உழைப்பினாலும்தான். பொங்கல் திருநாள் நெருங்கும் நிலையில் மக்க ளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்.