அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட குட்கா வழக்கு மீண்டும் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. இவர்கள் பெயர்களுடன் வேறு சில காவல்துறை அதிகாரிகள், சுகாதா ரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் வழக்கில் இடம் பெற்றுள்ளன.
சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரு மான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற் றப்பட்ட நாட்குறிப்பில் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ரமணா மற்றும் காவல்துறை உயர் அதி காரிகளுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருந்தன.
2013, மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத குட்காவிற்பனை மூலமாக 639.4 கோடி ரூபாய் வருமானம் குவித்ததோடு, அந்தப் பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும், அசையா சொத்து களைத் தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரி லும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாங்கியது அம லாக்கத்துறை விசாரணையில் கண்டறியப் பட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தேவை யற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச் சர்கள், முன்னாள், இந்நாள் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்றால், அதற்குத் தலைமைச் செயலாளர் அனுமதி வேண்டும். இதன் காரணமாக தற்போது மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி யுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர் பணத்திற்காக மக்களின் நலனைக் காவு கொடுத்தார். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை ஆகியவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகள் குட்கா வியாபாரி களுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டனர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மிகமோசமான முறை கேடுகளில் குட்கா மோசடியும் ஒன்று. எனவே முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரி கள் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசு விரைவாக அனுமதி வழங்க வேண்டும்.
சுகாதாரமான வாழ்க்கைக்குப் போதைப் பொருட்கள் பெரும் சவாலாக உள்ளன. இளைய தலைமுறையினரை இதிலிருந்து பாது காக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கில் தாமதமா கச் செயல்பட்டால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே சிபிஐ தரப்பு வழக்க றிஞர்களும் மாநில அரசு வழக்கறிஞர்களும் நேர்மையாக, விரைவாக, திறமையாகச் செயல்பட வேண்டும்.