headlines

img

இயந்திரமயமே தீர்வு

சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தோர்  குடும்பங்களுக்கு அரசு 30 லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற் கத்தக்கது. மலக்குழி மரணங்கள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் கண்காணிப்ப தற்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது.  

கடந்தாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர். அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, தில்லி போன்ற மாநிலங்களில் அதிகளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளுவதைத் தடைசெய்யவும் `மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013’ கொண்டுவரப்பட்டது. 

உள்ளாட்சி நிர்வாகங்களும், பொறுப்புடைய காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சட்டத்தை அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்து வதன் காரணமாக மலக்குழி மரணங்கள் தொடர்கின்றன.

நவீன உலகிலும் இந்தியாவில் சமூக அமைப்பில் சாதி ஆழமாக வேரூன்றியிருப்ப தால், தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றுதல் போன்றவை தலித் மக்கள் மீது திணிக்கப்படு கிறது. கழிவுநீர்த் தொட்டி மரணங்கள்,  தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருமளவில் நிகழ்ந்தி ருக்கின்றன. ஏனெனில் சட்டத்தில் கூறப்பட்டி ருக்கும்படி 58 வகையான பாதுகாப்புக் கருவி மற்றும் உபகரணங்கள் எதுவும் இங்கு பின்பற்றப் படவில்லை. 

எனவே சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தி, இந்தத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தலித் அருந்ததியர் குடும்பங்கள் இந்தத் தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.  

தமிழ்நாட்டில் தூய்மைப் பணிபுரிவோரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற் கென, 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. அது முழு வேகத்துடன் செயல்படுவதற்கேற்ற வகையில் திருத்தியமைக்கப்பட வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையி லான தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்டு மனித மாண்பு காக்கப்பட வேண்டும்.   தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த நிதி முழுமை யாக அவர்களின் நலனுக்கு, செலவிடப் படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.