கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கோஷ்டி பூசலில் பாஜக சிக்கித் தவிக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் பாஜகவின் சுயநல அரசியல் தற்போது கர்நாடகத்தில் அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அந்த மாநிலத்திற்கு தொடர்ந்து விஜயம் செய்து பல்வேறு திட்டங்க ளை அறிவித்தபோதும் மக்களிடம் அது எடுபட வில்லை. எடியூரப்பா துவங்கி பசவராஜ் பொம்மை வரை பாஜகவின் ஆட்சியில் லஞ்ச மும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. 40 சதவீத கமிசன் இல்லாமல் பாஜக ஆட்சியில் ஒரு பணி யும் நடக்காது என்ற குற்றச்சாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாஜக தனது வழக்கமான பிரித்தாளும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒரு வரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, கர்நாடகத்தில் ஒரு முஸ்லிம் கூட எங்களுக்கு வாக்களிக்க வேண் டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசிய கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் உடனிருந்திருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட மதம் அல்லது சாதியை தொடர்புபடுத்திப் பேசக் கூடாது. மத உணர்வுகளை தேர்தல் பிரச்சாரத் தில் இணைக்கக் கூடாது என்று தெளிவான விதி கள் உள்ளன. ஆனால் மக்களை இந்து, முஸ்லிம் என்று பிரிக்கும் வகையில் பாஜக தலைவரின் பேச்சு அமைந்துள்ளது. இது அவர்களுக்கு புதிதல்ல.
உ.பி. தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முஸ்லிம் மக்களை நேரடியாகவே தாக்கும் வகையில் பேசி னர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்நாடகத்திலும் இதே பாணியைத்தான் இருவரும் பின்பற்றுகின்றனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சா ரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த 4 சதவீதத்தை லிங்காயத்துக்கள் ஒக்கலிகர்க ளுக்கு வழங்கியுள்ளோம் என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த 4 சத வீதத்தை பறித்து மீண்டும் முஸ்லிம்களுக்கு வழங் குவார்கள். எனவே காங்கிரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என இந்துக்களை கேட்டுக் கொள்வதா கக் கூறியுள்ளார். அனைத்து இந்திய மக்களுக் கும் பொதுவான ஒரு அமைச்சர் இப்படிப் பேசுவது முறையா? இது அரசியல் சட்டத்திற்கு முரணா னது அல்லவா? ஊழல் முடைநாற்றமெடுத்து வீசும் கர்நாடக பாஜக ஆட்சியைக் காப்பாற்ற அக் கட்சியினர் அந்த மாநிலத்தை அழிவுப்பாதை யில் அழைத்துச் செல்லவும் துணிந்துவிட்டனர். அதை முறியடிக்க மதச்சார்பின்மையின் பக்கம் நின்று கர்நாடக மக்கள் வாக்களிப்பது அவசியம்.