விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளச் சாராய வியாபாரம் மறைமுகமாக தொடர்ந்து நடந்து வருகிறது என்பதன் வெளிப்பாடாகவே மரக்காணம் சம்பவம் அமைந்துள்ளது.
கள்ளச்சாராய பலியைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் 2 நாட்களில் 1558 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின ருக்கு தெரியாமல் கள்ளச்சாராய கும்பல் செயல் பட்டிருக்கிற வாய்ப்பே இல்லை. மிகப்பெரிய அள வுக்கு லஞ்சம் கைமாறுவதால் தான் கள்ளச் சாராய வியாபாரம் கனஜோராக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கள்ளச்சாராயத்தை தடுக்க கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நான்கு மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக கூறியுள்ளார். கள்ளச்சாராய கும்பல் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்க ளுக்கு துணை போகும் காவல்துறையைச் சேர்ந்த வர்களையும் களையெடுப்பது அவசியம்.
கள்ளச்சாராயம் தவிர, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள் நடமாட்டமும், பெருமளவு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி யாகின்றன. குறிப்பாக இளைய தலைமுறை யினர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து இந்த போதைக் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்களின் எதிர் காலம் பாழாகிறது. இவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ளுக்கு இரையாவது பெரும்பாலும் ஏழ்மை நிலை யில் இருக்கும் மக்கள் தான். அவர்களது உழைப்பு போதைக் கும்பலால் சுரண்டப்படுகிறது.போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடும் பாதிப்புக்கு உள் ளாகிறது. எனவே தமிழக அரசு இந்த விசயத்தில் சாட்டையைச் சுழற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க அரசு ஏற்கெனவே உறுதி அளித் திருப்பது போல டாஸ்மாக் கடைகளின் எண் ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். குடிநோயாளிகளுக்கு மனநல சிகிச்சை அளித்து அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்கள் நலம் மற்றும் மனித வளத்தோ டும் தொடர்புடையது. போதைப் பழக்கம் என்பது அதற்கு எதிர்மறையானது. எனவே தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்கவும் போதைப் பழக்கத்தை ஒழிக்கவும் முன்வர வேண்டும்.