headlines

img

போரை உடனே நிறுத்து!

பாலஸ்தீன சிறப்பு தூதர் ரியாஸ் மன்சூர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சி லின் சிறப்பு அமர்வில் உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார். வெறும் 6 நாட்கள் இடை வெளிவிட்டு மீண்டும் காசாவை இஸ்ரேல் உக்கிரமாக தாக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரு கிறது. எங்கெங்கு காணினும் மரண ஓலம். 17 ஆயி ரத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பறிக்கப் பட்டு விட்டது. இன்னும் அடங்கவில்லை இஸ்ரே லின் ரத்தவெறி. 

தனது தேசத்தின் துயரத்தை, மக்களின் கண் ணீரை, குமுறலை பக்கம் பக்கமாக அறிக்கைகளை முன்வைத்து ரியாஸ் மன்சூர் உரையாற்றிக் கொண்டிருந்த அந்த வேளையில் எதிர்முனை யில் ராபர்ட் உட் தனது செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் துணை தூதர்.  பாலஸ்தீன மக்களின் துயர கதை களை காது கொடுத்து கேட்பது கூட பாவம் என்று கருதிக் கொண்டிருந்தார் போலும். அத்தனை வெறுப்பு, அத்தனை வன்மம்.  

பாலஸ்தீன தூதர் உரையாற்றிய பிறகு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமலாக்க வேண்டும்; மனித நேய உறவுகளை முழு அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. செல்போனை பார்த்தவாறே இந்த தீர்மானத்திற்கு எதிராக கையை உயர்த்தினார் ராபர்ட் உட். பிரிட்டன் தூதர் வாக்கெடுப்பை புறக்கணித்தார். எஞ்சிய 13 நாடுகளும், போர் நிறுத்த தீர்மானத்தை ஆத ரித்து வாக்களித்த நிலையில் அமெரிக்கா மட்டும் போர் நிறுத்தம் கூடாது என்று கூறியது. 

இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம். அது ஈவிரக்கமற்ற குணம் கொண்டது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப் படுகொலையை முழு அளவில் ஆதரித் தும், நிதியளித்தும் வருவது அமெரிக்க ஏகாதி பத்தியமே என்பது  மீண்டும் மீண்டும் நிரூபண மாகி வருகிறது. 

சில நாட்களுக்கு முன்பு தெற்கு காசாவில்  உலக சுகாதார அமைப்புக்கு சொந்தமான மருந்து குடோனில் உள்ள மருந்துகளை உடனடி யாக அப்புறப்படுத்துமாறும் தவறினால் மருந்து களோடு சேர்த்து அதை தகர்த்து அழித்து விடுவோம் என்றும் இஸ்ரேலிய ராணுவத்திடமி ருந்து தகவல் கிடைக்கப் பெற்றதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு வெளியானது. பாதிக்கப்படும் பாலஸ்தீ னர்களுக்கு மருந்து கூட கிடைக்கக்கூடாது என்பதிலும் இஸ்ரேல் வெறித்தனமாக உள்ளது என்பதை இது மீண்டும் உறுதிபடுத்தியது. உலகின் கண்முன்பே மிகப் பெரும் மனித படுகொலை அரங்கேறி வருகிறது. ஏகாதிபத்திய மும் அதன் ஏவலாளிகளும் நடத்தும் இந்த வெறியாட்டத்திற்கு எதிராக இன்னும் வலுவான கண்டனக் குரல் எழட்டும்.