சமூகத்துக்கு வழிகாட்டுவதிலும், சேவை யாற்றுவதிலும் கிறிஸ்தவ சமூகத்தினரின் பங்க ளிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கி றது என்று பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்து மஸ் விழாவில் பேசியுள்ளார். இது அவருக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் கால தற்காலிக ‘ஞானோ தயம்’ ஆகும்.
நரேந்திர மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சிறுபான்மை, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு இழைக்கப் பட்ட பாரபட்சமும், அநீதியும் கொஞ்சம் நஞ்ச மல்ல. கல்வி மற்றும் சுகாதார துறையில் கிறிஸ்த வர்கள் பெருமைப்படத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர் என இப்போது பிரதமர் பசப்பு கிறார். ஆனால் மதமாற்றம் செய்வதற்காகவே அவர்கள் இந்த சேவையை செய்வதாக நாக்கூசாமல் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இப்போதும் அவதூறு செய்து வருகிறது.
இந்துத்துவா பரிவாரத்தினால் ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். அந்த கொலையாளிகளை ஆர்எஸ்எஸ் பரிவா ரம் பாதுகாத்தது. பழங்குடி மக்களுக்கு சேவை செய்த ஸ்டேன் சுவாமி பாதிரியாரை பொய் வழக்கில் சிறையில் தள்ளி பிணை கூட கிடைக்காமல் அவர் சிறையிலேயே மாண்டார். இதுதான் கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் லட்சணமா?
வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். பல வடகிழக்கு மாநி லங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜகவுக்கு வர வேற்பு அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. கிறிஸ்தவ மக்களான குக்கி மக்கள் மீது முதல்வ ரின் ஆதரவோடு மதவெறி, இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டது. இரண்டு சகோதரிகள் நிர்வா ணப்படுத்தப்பட்டு வீதியில் இழுத்து வரப்பட்ட தோடு, கும்பல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்போதும் கூட அந்த மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. அந்த மாநிலத்தை எட்டிப் பார்க்கக்கூட மறுத்த பிரதமர் இப்படிப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இவ் வாறு பேசுவது அவருக்கு ஒன்றும் புதிது அல்ல.
சொல் ஒன்று, செயல் வேறு என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாலபாடம். அந்த பள்ளியில் பயின்ற மோடி இப்படித்தான் பேசுவார். அவரது கிறிஸ்துமஸ் தின பேச்சு என்பது எந்தளவுக்கு பொய்மையானது என்பதை கிறிஸ்துவ மக்கள் நன்கு அறி வார்கள்.இவரது வார்த்தைகளில் இருந்து அல்ல, தாங்கள் படும் வாதைகளிலிருந்தே அவர்கள் முடிவெடுப்பார்கள்.