கடந்தாண்டு ஜூன் மாதம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 300 பயணிகள் உயிரிழந்தனர். இப்போது மேற்குவங்கத்தில் அதே ஜூன் மாதத்தில் திங்களன்று நடந்த ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் படுகாயம் அடைந்த னர். இந்த விபத்துக்களுக்கு காரணம் தானியங்கி விபத்து தடுப்பு தொழில் நுட்பம் கவச் செயல் படாமல் போனது தான்.
இந்த கவச் தொழில்நுட்பம் செயல்படாமல் போனதற்கு என்ன காரணம்? ஒடிசா விபத்து நடந்து ஓராண்டாகியும் இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ரயில் பாதைகளுக்கும் விஸ்தரிக்கா மல் போனது ஏன்? ஆனால் ஒன்றிய அரசும் ரயில்வே நிர்வாகமும் மனிதத் தவறு காரணமாக இருக்க லாம் என்று பழி போடுவதற்கு தயாராகி விட்ட தையே அவற்றின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அதைத்தான் ரயில்வே வாரிய தலைவர் ஜெய வர்மா சின்ஹாவின் பேட்டி காட்டுகிறது.
சரக்கு ரயிலை ஓட்டுநர் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் சிக்னலை புறக்கணித்து, பின் பக்கத்தில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது மோதியது. இது மனிதப் பிழையாகத் தெரிகிறது. விசாரணை க்குப் பிறகே உறுதியாகத் தெரியவரும் என்று அவர் கூறியிருப்பது அதைத்தான் சுட்டுகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? ரயில்வே யின் மற்றொரு அதிகாரி, தானியங்கி சிக்னல் செயல்படாத காரணத்தால் பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிக்னல்க ளையும் கடந்து செல்வதற்கான எழுத்துப்பூர்வ (டிஏ912) அனுமதியை ராணிபத்ரா ரயில் நிலைய அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங் கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று கூறியிருப் பது விபத்துக்கான உண்மைக் காரணத்தை தெளி வாக்குகிறது.
விபத்து நடந்த அன்று காலை 5.30 மணி முதல் தானியங்கி சிக்னல் செயல்படாமல் இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படு கிறது. எனவே கவச் தொழில்நுட்பத்தை அனைத்து ரயில் பாதைகளிலும் பொருத்துவதற்கு ஒன்றிய அரசும் ரயில்வே துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மோடி தலைமையி லான முந்தைய பாஜக அரசுக்கு அதில் ஆர்வம் இல்லை. ஏனென்றால் ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு திட்டமிடுவதை விட ரயில் பய ணிகள் மத்தியில் மோடியின் பிம்பத்தையும் செல் வாக்கையும் விளம்பரப்படுத்துவதற்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் மோடி செல்ஃபி பாய்ண்ட் அமைப்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கவச்சுக்கு கொடுக்கவில்லை என்பது தானே நிதர்சனம்.
பாஜக ஆட்சிக் காலத்தில் தானே ரயில்வே க்கு தனி பட்ஜெட் என்றிருந்த முறை ஒழித்துக் கட்டப்பட்டது. அதன் மூலம் அனைத்திலுமே பிரத மர் மோடிக்கே முக்கியத்துவம் கொடுத்து பய ணிகளின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டது. அதன் விளைவு தான் கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து. இந்த மனிதத் தவறுக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.