headlines

img

குரூரமான உண்மை

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மோடி அரசு பர பரப்பாக இருந்த வேளையில் இந்திய இளை ஞர்களின் வேலை வாய்ப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்ற விப ரங்கள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும், கொதிப்பையும் ஏற்படுத்துகின்றன.'

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கிராமப்புறங்களைச் சேர்ந்த 80 லட்சம் பேரின் வேலையும், நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு நிலை யான ஊதியம் பெறுபவர்கள் என்று கருதப்பட்ட வர்களில் 25 லட்சம் பேரின் வேலையும் என மொத்தம் 1.3 கோடி பேரின் வேலை பறிக்கப்பட்டி ருக்கிறது; அதுவும் கடந்த ஒரே மாதத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இந்திய உழைப்புச் சந்தையில் தொழிலா ளர்களின் பங்கேற்பு என்பது வெறும் 38.8 சதவீத மாக தற்போது மாறியிருக்கிறது. வேலை செய்யும் வயதை உடையவர்களில் 61.2 சதவீதம் பேர் வேலை வாய்ப்பில்லாதவர்களாக   மாற்றப்பட்டுள்ளனர். 

வேலையின்மை தொடர்பான இந்த புள்ளி விபரங்கள், தற்சமயம் வேலை தேடிக் கொண்டி ருப்பவர்கள், பதிவு செய்தவர்கள் பற்றிய விபரத்தின் அடிப்படையிலானவை மட்டுமே. 

மோடி அரசின் கொள்கைகளின் விளை வாக ஒரே மாதத்தில் சுமார் 130 லட்சம் பேரின்  வேலை பறிக்கப்பட்டிருப்பது குறித்து இந்திய ஊடகங்கள் பெரிதாக எந்த கவலையும்பட வில்லை. மாறாக பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியின் ஊதுகுழல்களும், சமூக ஊட கங்களில் செயல்படும் இவர்களது கூலிப்படையி னரும் மோடியை வானளாவ புகழ்வதையே தொழிலாக கொண்டுள்ளன. 

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னி பாதை திட்டத்தில் பல லட்சக்கணக்கான இளை ஞர்கள் விண்ணப்பம் செய்து வருகிறார்கள் என்று பெருமிதம் பொங்க இவர்கள் பிரச்சாரம் செய்கின் றனர். இன்னும் ஒருபடி மேலே போய் பல பகு திகளில் பாஜகவினரே ராணுவ அதிகாரிகளாக மாறி, அக்னிவீரராக உங்களை தேர்வு செய்கி றோம் என்று கூறி பயிற்சி முகாம் நடத்துவதாக வும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளி யிட்டு வருகின்றனர்.

வேலையின்மையின் கொடூர வெளிப்பாடே, அக்னி பாதைத் திட்டத்தில் இளைஞர்கள் குவிவ தன் அடிப்படை என்பதை மறைக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதை மீறி உண்மை  மிகவும் குரூரமான முறையில் வெளிப்பட்டு வருகிறது. பொருளாதார கண்காணிப்பு மையத் தின் ஆய்வு உட்பட வெளியாகி உள்ள விவரங் கள், இந்திய உழைப்புப் படையில் 60 சதவீதத் திற்கும் அதிகமாக எந்த வேலை வாய்ப்பும் இல்லா மல் வீதிகளில் நிற்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

இந்தியாவின் இந்த மிகப் பெரும் வேலை யின்மை துயரத்திலிருந்து சற்றேனும் மீட்க  வேண்டுமானால் கிராமப்புற வேலையுறுதித் திட்டத் திற்கு உடனடியாக கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும்; பொது முதலீடை அதிகரித்து புதிய புதிய வேலைகளை உருவாக்க வேண்டும்; மகா கோடீஸ் வரர்கள் மீது செல்வ வரி விதித்து புதிய பொது முதலீடுகளை உருவாக்க வேண்டும்.