headlines

img

மிகப்பெரிய ஆபத்து !

ஒன்றிய மோடி அரசு  “இந்திய தரவுகள் அணுகல் மற்றும் பயன்பாட்டுக் கொள்கை (ஐடிஏயுபி)’’க்கான வரைவு அறிக்கையை வெளி யிட்டிருக்கிறது.  இதன் படி இந்திய மக்களின்  தரவு களை அரசே திரட்டி, அதனைத் தரம் வாரியாக பிரித்து விற்பனை செய்து கொள்ளலாம் என்கிறது. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது.

2019-இல்  இதே போன்று வாகன போக்குவரத்து தரவுகளை விற்றது மோடி அரசு .  அந்த தரவுகள் வழியாக அதனைப் பயன்படுத்தும் உரிமையாளர் களின்  தனிப்பட்ட  விபரங்கள்  வெளியில் கசிந்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. உடனே   தரவு கள் விற்பனை நிறுத்தப்பட்டது.  ஆனால் அத னை வாங்கிய 142 தனியார் நிறுவனங்கள் அந்த  தரவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடிய வில்லை.  இந்நிலையில் மக்களிடமிருந்து அரசு திரட்டும் அனைத்து  தரவுகளும்  விற்கப்படும் என்பதை எப்படி ஏற்க முடியும் ? 

இந்தியா ரூ. 5லட்சம் கோடி பொருளாதாரத்தை  எட்டவேண்டும் என்றால், அதில் 1 லட்சம் கோடியை   இணைய வழி தரவுகளைப் பயன்படுத்திப் பெறப் போகிறோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில் 100 கோடியே 30 லட்சம்  ஆதார் அட்டைகள், 100  கோடியே 10 லட்சம்  மொபைல் இணைப்புகள் மற்றும் 75 கோடி  இணையச் சந்தாதாரர்கள் இருக்கின்ற னர். கிராமங்களில் 3 லட்சம் இசேவை மையங்கள்  இருக்கின்றன.  இவற்றில் இருக்கும் அனைத்து தரவு களும் தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்கப்படும் என்கிறது.

ஏற்கனவே இப்படி  ஏர் இந்தியாவை விற்றதன் விளைவு, உக்ரைனில் பரிதவிக்கும் இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசிடம் ஒரு சொந்த விமானம் கூட இல்லாமல் முட்டுச்சந்தில் நிற்பது ஆகும். 

நடப்பு பட்ஜெட்டில் கௌதம் அதானி ஆதிக்கம் செலுத்தும் டேட்டா சென்டர் வர்த்தகத்திற்குத் தேவையான வசதிகளை, நிதியமைச்சர் ஒருங்கி ணைந்த உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்த்தார். அதேபோல்   நிதி மசோதா சுங்கத்துறை சட்டப்பிரிவு 135 ஏஏவில்  “தரவுகள் பாதுகாப்பு” சேர்க்கப்பட்டது. அதன் படி ஒருவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி  செய்யும் விபரங்களை அவரே பதிவிட்டாலோ, வெளியில் தெரிவித்தாலோ அது தண்டனைக் குரிய குற்றம்.  இனி தனிநபர் செய்யும் வணிகம் உள்ளிட்ட எல்லா நடவடிக்கை குறித்த  தரவுகளும் ஒன்றிய அரசுக்குத்தான் சொந்தம். அது பணத் திற்கு விற்கும்.  அது சட்டப்படி குற்றம் ஆகாது.

சீன  செயலிகள் தகவல்களைத் திருடுகிறது எனத் தடை செய்யப்பட்டது.  இனி அந்த திருட்டை நாங்களே செய்வோம், அதனைச் சீனாவிற்கும் விற்போம் என்கிறார் மோடி.  தனிநபர் தகவல் உரிமை என்னவாகும் என்றால், அதனைத் தனியாகப்  பிரித்து எடுத்துவிடுவோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில்  தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் இல்லாத நிலையில்; இது எந்தவகையிலும் சாத்தி யமில்லை.  “ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்த தக வல் தொகுப்பில்” ஒன்றை மட்டும் பாதுகாப்போம் என்பது ஊரை ஏமாற்றும் வேலையே ஆகும். ஐடிஏயுபி வரைவு அறிக்கை இந்திய மக்களின் தனி உரிமையையும் கூறு கட்டி விற்கும் சூட்சமத்தின் தொகுப்பாகும். இதனை முற்றாக நிராகரித்திட வேண்டும்.