தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்து மீறலும், அடாவடியும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தன்னுடைய அதிகார வரம்பை மீறி, அரசியல் சட்ட கடமைகளை புறந்தள்ளி அவர் தானடித்தமூப்பாக நடந்து கொள்வதோடு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில திமுக அரசுக்கெதிராக போட்டி அரசாங்கத்தை நடத்த முயல்கிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவை மாநில அரசுக்கு தெரிவிக்கா மலேயே நடத்த முடிவு செய்ததோடு கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒன்றிய இணைய மைச்சர் எல்.முருகனை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவித் தார். ஆனாலும் கூட ஆளுநர் தன்னுடைய இஷ்டப்படி பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்துள்ளார்.
ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் க.ராகுல்ஜியை காவல்துறையினர் வீடு புகுந்து கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த அச்சுறுத்தலையும் மீறி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தி ஆளுநருக்கு தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மாநில அரசு புறக்க ணித்த ஒரு விழாவை நடத்தும் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்துவது தவறா? தமிழக காவல்துறை இத்தகைய அணுகு முறையை கைவிட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, பட்டமளிப்பு விழாவை பிரதமர் மோடியின் புகழ்பாடும் விழாவாக ஆளுநர் மற்றும் ஒன்றிய இணையமைச்சர் முருகன் ஆகியோர் மாற்றியுள்ளனர். உலகளவில் பல அறி ஞர்களின் பட்டமளிப்பு விழா உரைகள் புகழ் பெற்றவை. கல்வியின் பெருமையை உணர்த்துவ தாகவும், மாணவர்களின் எதிர்கால கடமைகளை சுட்டுவதாகவும் இத்தகைய உரைகள் அமைவது வழக்கம்.
ஆனால் கவுரவ விருந்தினராக அழைக்கப் பட்ட எல்.முருகன் மோடி அரசின் புகழ் பாடி யுள்ளார். வேலை கேட்பவர்களாக அன்றி வேலை தருபவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் கனவு என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவில் அவர் வெந்நீர் ஊற்றியுள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்கும் அரசின் கடமையை கை கழுவியுள்ளார். இதற்குத் தான் அவரை கவுரவ விருந்தினராக அழைத்தார்கள் போலிருக்கிறது.
பல்கலைக்கழகங்கள் ஒன்றும் ஆளுநரின் சொந்த சொத்து அல்ல. இவர் தனது சொந்த சித்தாந்தத்தை அங்கு திணிக்க முயல்வது அராஜகமானது. பல்கலைக்கழகங்கள் மாணவர்க ளின் சொத்து. அதை அபகரிக்க முயலும் ஆளு நரை கண்டிக்க அனைவரும் முன் வரவேண்டும்.