headlines

img

ரத்தக் கறை படிந்தவர் ஜீவகாருண்யம் பேசலாமா?

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில்  நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி “மத்தியில் காங்கி ரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்கத் தாமரைகள் மலரும்” என்றும் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார். இப்படிப் பேசுவதற்குத்  தகுதி, தராதரம் இருக்கிறதா?  

 தனக்குப் பிடிக்காத ஆட்சியைக் காங்கிரஸ் கவிழ்த்தது உண்மைதான் என்றாலும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக் குப் பிறகு அரசியல் சாசனத்தின் 356ஆவது பிரி வைத்  தவறாகப் பயன்படுத்த முடியாத நிலை  உருவாக்கப்பட்டது. ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன. இதனால்தான் தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசாங்கத்தால் அந்த பிரிவைப்  பயன்படுத்தமுடியவில்லை. ஆனால் ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது. மத்தியில் மோடி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் கடந்த 8 ஆண்டுகளில் இது வரை 277 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறது. இதற்குப் பல ஆயிரம்கோடியை வாரி இறைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலை மையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-சிவசேனா- தேசிய வாத காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது. கோவா வில் பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் அங்குள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்க ளைக் கொத்தாக விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார் பற்ற ஜனதாதள ஆட்சியைக் கவிழ்த்தது.  வட கிழக்கு மாநிலங்களில் சொல்லவே வேண்டாம், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த  முதலமைச்சரைத் தவிர  அனைவரையும் விலைக்கு வாங்கியது. மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத அக்கட்சி அங்கிருந்த சிறிய கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சியைக் கொள்ளை யடித்தது.

தில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்  ஆத்மி அரசைக் கவிழ்ப்பதற்காகப் பல முறை கேவலமான செயல்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண் டது.  தற்போது கூட துணை முதல்வரை அமலாக்கத் துறை வைத்து மிரட்டி ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.100 கோடி பேரம் பேசி மாட்டிக்கொண்டது.  மக்களால் தேர்ந்தெடுக் கப்படும் மாநில அரசுகளை அடுத்தடுத்து படுகொலை செய்யும் சீரியல் கொலைகாரனாக பாஜக செயல்படுகிறது. அதிகாரப் பசியால் ஜனநாய கத்தையே பாஜக அழித்துக்கொண்டிருக்கிறது. 356ஆவது சட்டப்பிரிவுகுறித்து பேசியவர், ஆப ரேஷன் கமல், ஆபரேஷன் லோட்டஸ் பற்றியும் வாய் திறந்திருக்கவேண்டும்.  பிரதமர் பேச்சு கசாப்புக்கடைக்காரர் ஜீவகாருண்யம் பேசுவ தைப் போல் உள்ளது.