headlines

img

மருத்துவப் படிப்பை சீரழிக்கும் ஒன்றிய அரசு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவப் படிப்புக்கான காலியிடங்களை சம் பந்தப்பட்ட மாநிலங்களுக்கு திரும்ப வழங்க மறுப்பது அநீதியாகும். தமிழகம் உள்ளிட்ட மாநி லங்கள் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீத இடங்களை வழங்கு கிறது. இந்த இடங்கள் நிரம்பவில்லையென்றால் அந்தந்த மாநிலங்கள் காலியிடங்களை பூர்த்தி செய்து கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.

ஆனால் 2021- 22 கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையை தேசிய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துவிட்டது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டு நிரம்பாத இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 786 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில் 86 இடங்கள் நிரம்பவில்லை. ஆனால் இந்த இடங்களை நிரப்பிக் கொள்ள தமிழ் நாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலையில் வாய்ப்புள்ள இடங் களை வீணாக்குவது என்ன நியாயம்? அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அர்த்தமற்ற விதி யும், வறட்டுப் பிடிவாதமும்தான் இதற்குக் காரணம். 

நீட்தேர்வு என்கிற பெயரில் கார்ப்பரேட் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு வழிவகுத்துள்ளது. நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது நடந்து கொண்டி ருக்கும் கேலிக்கூத்துகளுக்கு ஒரு உதாரணமா கும். உயர்கல்வித்துறையை மொத்தமாக கபளீ கரம் செய்ய ஒன்றிய அரசு கொஞ்சம் கொஞ்ச மாக காய் நகர்த்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கை அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள மருத்துவ ஆணையம் பல்வேறு குளறுபடிகளை மருத்து வப் படிப்பில் செய்ய திட்டமிட்டுள்ளது.  அதுவும் நடைமுறைக்கு வரும் போது மருத்துவப் படிப்பு என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

நீட் தேர்வு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்கவும், மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிக ரிக்கவும் தடை விதித்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது தமிழக அரசின் குறிக்கோளாக உள்ள நிலையில் அதை நிறை வேற்றவிடாமல் அகில இந்திய மருத்துவ ஆணையம் தடுக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கான கட்டுமானப்பணி தொடர்ந்து இழுத்தடிக் கப்படுகிறது. இது குறித்து உயர்நீதிமன்றமே இடித்துரைத்துள்ளது. ‘கல்வியில் சிறந்த தமிழ் நாடு’ என்பதை கீழிறக்கம் செய்வதே ஒன்றிய அரசின் நோக்கம் போல தோன்றுகிறது.