headlines

img

உண்மைகளின் ஊர்வலமல்ல!

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்  கீழ் வளர்ச்சி, மாற்றம் என்பதெல்லாம் தலை கீழானவையே. நாட்டின் பொருளாதார ஆய்வ றிக்கை  தாக்கல் செய்வதை ஒரு மாதம் முன்தள்ளி ஜனவரி கடைசியிலும் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி முதல் நாளிலும் வைத்திருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவதையும் மாற்றி யிருக்கிறார்கள். 

குடியரசுத் தலைவரின் உரையில் பெண்கள் மேம்பாட்டுக்கு அரசு முன்னுரிமை அளித்துள் ளது என்று கூறியிருப்பதில் ஏதாவது உண்மை உண்டா? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த ஏழாண்டு காலமாக ஏறெடுத்துப் பார்க்கப்படா மலே உள்ளது. ஆனால் எத்தனையோ சட்டங்கள் நிதிச் சட்ட முன்வடிவில் மரபுக்கு மாறாக, சட்ட நிகழ்வுகளுக்கு நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பேச்சில் வெல்லம், நடப்பில் கள்ளம் என்பதே ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் செயல்பாடு, அதையே மோடி அரசு பின்பற்றி வருகிறது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும் என்றும் குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான நடவடிக்கை குறித்த குறிப்பு கூட இல்லை. விவசாயிகளின் கடந்த ஓராண்டு கால வீரஞ்செறிந்த போராட்டத்தால் விலக்கிக் கொள்ளப்பட்ட வேளாண் விரோதச் சட்டங்கள், தவிர்த்த மற்ற கோரிக்கைகளான விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டம்  கொண்டு வருவது பற்றி எதுவும் சொல்லப் படவில்லை.

ஆனால் விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாய ரயில் இயக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. விலைக்கு உத்தரவா தச் சட்டம் இல்லாமல் ரயிலில் கொண்டு சென்று கட்டுபடியாகாத விலையால் வீதியில் கொட்டி விட்டு விவசாயிகள் மேலும் நட்டமடைவதற்குத் தானே இது வழிவகுக்கும். இவை யாவும் கார்ப்ப ரேட்டுகளின் கைகளுக்கு விவசாயத்தை மடை மாற்றம் செய்வதற்கான கபடத்தனமான நட வடிக்கையல்லாமல் வேறென்ன?

இப்படி நிறைய படாடோப அறிவிப்புகளும் பெரும் பீற்றல்களும் தான் குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெற்றுள்ளன. அதில் கொரோ னா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்தி ருப்பதாகக் கூறுவதும் 80 கோடி பேருக்கு இலவச ரேசன் வழங்கியதாகச் சொல்வதும் அடக்கம்.

இதற்கெல்லாம் சிகரம் தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகச் சொல்வதுதான். அதுவும் திருவள்ளுவரைத் துணைக்கு அழைத்து உண்மை போல உலவ விட்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு எழுதுவதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்ட தற்கு கடும் எதிர்ப்பும் போராட்டமும் எழுந்தது. அதையொட்டி, மாநில மொழிகளில் எழுதலாம் என்று இறங்கி வந்தது மோடி அரசு. ஆனால் இப்போது ஏதோ அனைத்து மொழிகளையும் சமமாகக் கருதுபவர்கள் போல் பேசுவது யாரை ஏமாற்ற? மொத்தத்தில் இது உண்மைகளின் ஊர்வலமல்ல; பொய்களின் போலி நடை!