மதுரையில் சுற்றுலா வந்த ரயிலில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதே சத்தைச் சேர்ந்த 9 பேர் பலியான துயரம் மிகவும் வேதனையளிக்கிறது. சுற்றுலா செல்லும் பய ணிகள் இத்தனை பெரிய விபத்தில் சிக்கி உயி ரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாது காப்பு ஆணையர் விசாரணையை துவக்கி யுள்ளார். முதற்கட்ட ஆய்வின்படி, பயணிகள் தங்கள் வசம் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்ததும், அதை பயன்படுத்த முயற்சித்த போது விபத்து ஏற்பட்டு தீப் பற்றியது என்பதும் தெரிய வந்துள்ளது.
எளிதில் தீப் பற்றக்கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்பது உள்பட ரயில்வேயில் வலுவான நிபந்தனைகள் உள்ளன. ஆனால் பல மாநிலங்களில் சுற்றி வந்து நாட்டின் தென்கோடி வரைக்கும் வந்து விட்டு திரும்ப ஊருக்குச் செல்லும் போது மதுரை யில், பயணிகள் எடுத்து வந்திருந்த சிலிண்டர் வெடித்து துயரம் நேர்ந்துள்ளது. இது, ரயில்வே யில் சுற்றுலாவுக்கு என்று பதிவு செய்யப்படும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்கிறார்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த ரயிலில் இரண்டு எரிவாயு உருளைகள், மண்ணெண்ணெய் அடுப்பு, மண் ணெண்ணெய், விறகு போன்றவற்றை பயணிகள் கொண்டு வந்திருந்தது தெரிய வந்துள்ளது. இத்த கைய ரயில் பெட்டிகளை சோதிப்பது குறித்த அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதையும் ரயில் வேத்துறை தெளிவாக குறிப்பிடவும் இல்லை.
ஏற்கெனவே ஒடிசாவில் நடந்த மிகப் பெரும் ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் எனப்படும் ரயில் ஓட்டு நர்கள் எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி, 16 மணி நேரம் அளவிற்கு ஓய்வு, உறக்கமின்றி பணியாற்றுகிறார்கள் என்பதும், ஓட்டுநர்கள் உட்பட ரயில்வேயின் அனைத்து நிலைகளிலு மாக சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப் பதுதான் இதுபோன்ற பெரும் விபத்துகளுக்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அப்போதைக்கு நிவாரணம் அளித்து பிரச்சனையை ஒன்றிய மோடி அரசு முடித்துக் கொண்டதே தவிர, பயணிகள் பாதுகாப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதையே மதுரை விபத்து காட்டுகிறது. ஏனென்றால் ரயில்வேயில் காலியாகவுள்ள ஊழியர் பணியிடங்களோடு, ரயில்வே பாதுகாப்புப் படையிலும் சுமார் பத்தா யிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதுதான், பயணிகள் பாதுகாப்பை அவர்களால் உறுதி செய்ய முடியாததற்கு காரணம்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பு வதைத் தவிர மோடி அரசும், ரயில்வே துறையும் எந்த சால்ஜாப்பு கூறினாலும் பயணிகளின் துயரம் தீரப் போவதில்லை.