பன்னாட்டு நிதி நிறுவனத்தின் இந்தியா வுக்கான நிர்வாக இயக்குநராக செயல்படும் சுர்ஜித் பல்லா, இந்திய அரசின் முன்னாள் பொரு ளாதார ஆலோசகர் அரவிந்த் வீர்மணி மற்றும் நியூயார்க்கில் வசிக்கும் பொருளாதார நிபுணரான கரண் பாசின் ஆகிய மூவரும் சமீபத்தில் இந்தியாவின் வறுமை தொடர்பாக அளித்துள்ள ஓர் ஆய்வறிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, இந்தியாவில் தீவிர வறுமை 2019ல் ஒரு சதவீதத்திற்கும் கீழாக குறைந்து வெறும் 0.8சதவீதமாக வீழ்ந்துவிட்டது என்றும் மோடி அரசின் திட்டங்களால் இந்தியாவில் வறுமை குறைந்து வளர்ச்சி பெருமளவு ஏற்பட்டுவிட்ட தாகவும் அளந்துவிட்டுள்ளது. இந்த அறிக்கை யை ஆதரித்து பாஜக பிரமுகர்கள் மோடியை புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மை வெகுதூரத்தில் உள்ளது.
இந்தியாவில் வறுமையை அளவிடுவது தொடர்பாக ஆட்சியாளர்கள் தொடர்ந்து குழப்பம் செய்து வருகிறார்கள். இருப்பினும் வறுமைக்கோடு தொடர்பாக ஆட்சியாளர்களே உருவாக்கிய சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மற்றும் ரெங்கராஜன் கமிட்டி ஆகிய இரண்டு குழுக்களும் அளித்த வரையறையோடு ஒப்பிடும் போது மோடி ஆதரவு பொருளாதார ‘நிபுணர் களின்’ அறிக்கை எவ்வளவு மோசடியானது என்பது தெரியவரும்.
2009இல் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி உரு வாக்கிய வரையறையில், கிராமப்புற இந்தியா வில் நாளொன்றுக்கு ரூ.26 அளவிற்கு நுகர்பவரும் நகர்ப்புற இந்தியாவில் ரூ.32 அளவிற்கு நுகர்பவ ரும், வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பவர் என்று கூறியது. 2011-12ல் கிராமப்புற இந்தியாவில் தனிநபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.816, நகர்ப்புற இந்தியாவில் தனிநபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 இருந்தால் வறுமைக்கோட்டி ற்கு மேல் இருப்பவர் என்று இதே கமிட்டி வரை யறை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் 2012இல் ரங்கராஜன் கமிட்டி அமைக் கப்பட்டது. 2014ல் இந்த கமிட்டி அளித்த அறிக்கை யில் நகர்ப்புறத்தில் நாளென்றுக்கு ரூ.47 அளவிற் கான நுகர்வு, கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.32 அளவிலான நுகர்வு இருந்தால் வறுமைக் கோட்டிற்கு மேல் என்று கூறியது. நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,407, கிராமப்புறத்தில் ரூ.972 இருந்தால் வறுமைக் கோட்டிற்கு மேல் என்று கூறியது.
இதிலும் விமர்சனங்கள் இருந்தது என்ற போதிலும் பொதுவாக இந்த அடிப்படையை யாவது நிறைவேற்றுங்கள் என்று குரல் எழுந்தது. ஆனால் மேற்குறிப்பிட்ட அளவிற்கு கூட வருமா னம் இல்லாத, நுகர்வு இல்லாத மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். 2015இல் உலக வங்கி நாளொன்றுக்கு 1.90 டாலர் நுகர்வு என்பதை தீவிர வறுமைக்கான அளவீடாக நிர்ண யித்தது. இது இந்திய மதிப்பில் நாளொன்றுக்கு ரூ.100க்கும் மேலாகும்.
இதில் எந்த அளவீட்டையும் எட்டிப்பிடிக் காத இந்தியாவில் 2020-21ல் 26.5சதவீதம் மக்கள் கொடிய வறுமையில் உழல்கிறார்கள் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட விபரங்கள் ஆகும். ஆனாலும் மோடி ஆதரவு ஊதுகுழல்கள் இந்தியா வறுமையை வென்றுவிட்டதாக மோசடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.