பாலஸ்தீனத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு இஸ்ரேல் நடத்தி வரும் மனிதப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. காசா பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் மனதை பதறச் செய்கின்றன. ஆனால் எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி, சர்வதேச சமூகத்தின் எதிர்ப்புக் குரலுக்கு எந்த மரியாதையையும் தராமல் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதாகக் கூறிக் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் இன்னும் தொடர்கி றது. காசா பகுதியில் ஐ.நா. நடத்தும் பள்ளிகள் மீது கடந்த பத்து நாட்களில் ஆறு முறை இஸ்ரேல் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன.
இதுவரை 37ஆயிரத்திற்கும் மேலாக அப் பாவி காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 86ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 23 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தக வல்கள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் இந்த அனைத்து எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். பசியும், பட்டினியும் காசா மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைப்பதைக் கூட ஈவிரக்கமற்ற முறையில் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
பாதுகாப்பு மண்டலம் என்று ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளில் காசா மக்கள் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அந்த இடங்களைத்தான் தற்போது இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்கி வரு கின்றன. இதுவரை போர் காரணமாக 80 சதவீத பாலஸ்தீன மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறுகிறது.
காசா பகுதிக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்டது. குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்களால் மட்டுமின்றி பட்டினி யாலும் பாலஸ்தீன மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழுகின்றனர். ஆனால் மேற்காசியப் பகுதி யில் தன்னுடைய வேட்டை நாய் போல செயல் படும் இஸ்ரேலின் அடாவடிகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபை யில் பிற நாடுகள் கொண்டு வரும் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தைக் கூட அமெரிக்காவும் அதன் ஒருசில கூட்டாளி நாடுகளும் அர்த் தமிழக்கச் செய்து விடுகின்றன.
ஹமாஸ் அமைப்புடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத குழந்தைகள் மற்றும் பெண்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டு சர்வ தேச சமூகம் கொதித்தெழ வேண்டும். ஒன்றுபட்ட முயற்சிகள் மூலம், அமெரிக்க ஆதரவுடன் இஸ் ரேல் நடத்தும் மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என இஸ்ரேல் அரசு கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனம். இன்றைய நிலையில் இஸ்ரேலிய அரசுதான் பயங்கரவாதத்தின் நிலைக்களனாக இருக்கிறது.