பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் பங்கேற்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நாக அவுட் சுற்றிலிருந்தே சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை சென்றது. கடந்த செவ்வாயன்று (06.08.2024) நடைபெற்ற அரையிறுதியில் ஜெர்மனியை சந்தித்த இந்தியா, 3க்கு 2 என்ற கணக்கில் போராடித் தோல்வியை தழுவி, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.
இதைத்தொடர்ந்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை இன்று(08.08.2024) எதிர்கொண்டது. இதில், தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 2க்கு 1 என்ற கோல் கணக்கில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில் மீண்டும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.