பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 100கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்து உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றி வந்த இவர் இன்று நாடு திரும்பினார். இவருக்குப் பொதுமக்கள் மற்றும் சக வீரர்கள் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத் என் அணிக்கும், என் குடும்பத்தினருக்கும், சக இந்தியர்களுக்கும் சொல்லிக் கொள்வது, நாம் எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ அது நிறைவேற்றப்படாமல் இருப்பதாக உணர்கிறேன்.
சில நேரங்களில் நாம் தவறவிட்டவை நமக்கு கிடைக்காமலே போய்விடும். வேறோரு சூழலில் என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்புள்ளது. என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும்.
வருங்காலத்தில் எனக்காக என்ன காத்திருக்கிறது என்பதைக் கணிக்க முடியாது ஆனால் என் மனதுக்குச் சரி எனத்தோன்றும் விஷயங்களை அடையத் தொடர்ந்து துணிச்சலுடன் போராடுவேன் என மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.