உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் அதிர டியை வெளிப்படுத்தி வரும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தனது 3-வது சுற்றில் தாய் லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சோச்சுவாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பதிலடியுடன் அசத்திய சிந்து
சிந்துவை விட தாய்லா ந்து வீராங்கனை சோச்சுவாங் துடிப்பாக விளையாடக் கூடியவர். கடைசியாக சோச்சுவாங்குடன் விளை யாடிய இரு ஆட்டங்களி லும் சிந்து தோல்விய டைந்திருந்த நிலையில், தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முனைப்பில் அதிரடியாக செயல்பட்டு பதிலடி கொடுத்துள்ளார். சிந்து காலிறுதியில் மிகவும் பலம் வாய்ந்த தாய் ஸுயிங்கை (சீன தைபே)எதிர்கொள்கிறார்.