games

img

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப்

விளையாட்டு உலகின் முக்கிய தொடரான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 19-வது சீசன் (2025-ஆம் ஆண்டு) ஜப்பானில் நடைபெறுவதாக உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.  உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த கென்யா, சிலேசியா (மத்திய ஐரோப்பா), சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் போட்டியில் இருந்தன. எனினும் இறுதியில் ஜப்பான் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் பொறுப்பை பெற்றது. 18-வது சீசன் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது.

விளையாட்டு உலகில் ஜப்பான் ஆதிக்கமா?

உலக தடகள சாம்பியன்ஷிப் நடத்தும் பொறுப்பு கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒலிம்பிக் போட்டியை நடத்துவது போன்று நடத்தும் வாய்ப்பை கிடைக்க போராடுவது போல பல நாடுகளுடன் முட்டிமோதிக் கொண்டு தான் பெற முடியும். ஆனால் ஜப்பான் நாடு விளையாட்டு போட்டி நடத்தும் பொறுப்பை பெற வாக்கெடுப்பாக இருந்தாலும் சரி, வெளிப்படை மற்றும் மறைமுக தேர்வு எதுவாக இருந்தாலும் உலக விளையாட்டுத் தொடர்களை அடிக்கடி நடத்தும் வாய்ப்பை பெற்று விடுகிறது. இதற்கு காரணம் ஜப்பான் நாட்டின் விளையாட்டு அதிகாரிகள் ஒலிம்பிக் மற்றும் உலக சம்மேளனத்தில் அதிகம் பணியாற்றி வருவது தான். சொந்த விளையாட்டு அதிகாரிகள் மூலமாக விளையாட்டு உலகில் தங்களுக்கு சாதகமானதை ஜப்பான் பெற்றுக்கொள்வதாக நாள் கடந்த குற்றச்சாட்டு இருந்து வந்தாலும் அதனை விளையாட்டு உலகம் கண்டுகொள்வதில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் ஒலிம்பிக் உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.