உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
இன்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள போட்டியாளர்களுடன் மோதிய நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து பட்டியலில் முதலிடம் பிடித்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு வலுவான போட்டியாளரான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், தனது மூன்றாவது வாய்ப்பில் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரர்கள் டிபி மனு (6-ஆவது இடம்) மற்றும் கிஷோர் ஜெனா (5-ஆவது இடம்) பிடித்து டாப் 6 வீரர்களில் இடம் பெற்றனர்.
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக் குடியரசைச் சேர்ந்த யக்கூப் வெண்கலம் வென்றார்.