games

img

ஒலிம்பிக் பேட்மிண்டன்....   அரையிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி... 

டோக்கியோ 
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையார் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்  பி.வி.சிந்து, துடிப்பான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற சீன தைபேவின் டாய் ட்ஸுங்கை எதிர்கொண்டார். 

தொடக்கம் முதலே புள்ளிகள் குவிப்பதற்கு திணறிய சிந்து முதல் செட்டில் மட்டுமே ட்ஸுங்கிற்கு ஈடுகொடுத்து விளையாடினார். முதல் செட்டை 18-21 என்ற கண்களில் இழந்த சிந்து, 2-வந்து செட்டில் கடுமையாக போராடினார். ஆனால் சுதாரித்துக்கொண்ட டாய் ட்ஸுங் ஆட்டத்தை அதிரடியை வெளிப்படுத்தி 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் 2-வது செட்டையும் கையிலெடுத்து, 2-0 என்ற செட் கணக்கில் சிந்துவை வெளியேற்றினார். கடந்த சீசன் ஒலிம்பிக்கில் (ரியோ) வெள்ளி வென்ற சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதியில் தோல்விகண்ட சிந்து, சீன வீராங்கனையுடன் ஞாயிறன்று நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகிறார்.  

;