ஹங்கேரி தலைநகர் புடாபெஸ் டில் நடந்த உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் தொடரின் கலை பிரிவில் (நீர் நடன சாகசம்) அமெரிக்க நீச்சல் வீராங்கனை அனிடா அல்வாரெஸ் புத னன்று நடைபெற்ற சோலோ ஃப்ரீ ஃபைனலில் குளத்துக்கு உள்ளேயே மயங்கினார். அனிடா நீருக்குள் இருந்து வெளியே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபியூன்டெஸ் துரிதமாக செயல்பட்டு அவரை உயிருடன் மீட்டுள்ளார். தற்போது,”அனிடா நலமாக இருப்ப தாகவும், ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் உடல்நிலை இயல்பு நிலைக்கு மாறும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் எனவும், டீம் ஃபைனல்ஸ் பிரிவில் அனிடாவை விளையாட வைக்கலாமா என்ற கேள்வி க்கு மருத்துவர்கள் இன்னும் பதில் அளிக்க வில்லை” என பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபியூன்டெஸ் தகவல் தெரிவித்துள்ளார்.