games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றுவாரா நடால்? இன்று இறுதி ஆட்டம்

களிமண் தரைகளில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் போராட்ட குணமிக்க வீரரும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் பட்டியலில் டாப் ஆர்டரில் உள்ளவருமான ரபேல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 8-வது  இடத்தில் உள்ள நார்வே நாட்டின் ரூத்தை எதிர்கொள்கிறார். நடப்பாண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் நடாலும், முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் உலகில் இறுதிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ரூத்தும் களமிறங்குவதால்  ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் மிகவும்  பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இறுதி ஆட்டம் ஞாயிறன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.