games

img

டென்னிஸில் திணறும் சீனியர்கள் கொரோனா முடக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளசுகள்

டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றுப்பாதை வேறு பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அனுபவம், சீனியர் இந்த சொல்லுக்கு முகவரி தெரியாத அளவிற்கு எல்லாம் மாறிவிட்டது. இதற்கு காரணம் இளசுகளின் அதிரடி என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் எல்லாவற்றிற்கும் காரணம் கொரோனா தான்.  கொரோனா காலங்களில் சீனியர்கள் பலர் ஓய்வில் ஜாலியாக இருந்தனர். கிட்டத்தட்ட பயிற்சி எதுவும் இல்லாமல் பள்ளி காலங்களில் சிறுவர்களுக்கு விடுமுறை அளிப்பது போல பொழுதை கழித்தனர். இதனால் உடல்  பருமன், உடலின் இயல்புநிலை மாற்றம் போன்றவைகள் ஏற்பட்டுள்ளதால் சீனியர்கள் தற்போது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பார்ம் பிரச்சனையில் சிக்கி தவியாய் தவித்து வருகின்றனர். ஆனால் டென்னிஸ் கனவுடன் இருக்கும் இளசுகள் கொரோனா முடக்க காலங்களில் வீட்டிற்கு உள்ளேயோ, அருகிலேயே உடற்பயிற்சி, சாதாரண டென்னிஸ் பயிற்சி உள்ளிட்டவைகளை தொடர்ச்சியாக செய்துள்ளனர். மேலும் யூடியுப் உள்ளிட்ட ஆன்லைன் வலைத்தளங்களில் டென்னிஸ் தொடர்பான ஸ்ட்ரிக்குகளை கற்றுக்கொண்டு தற்போது சர்வதேச டென்னிஸ் தொடர்களில் அனுபவம் இல்லாத  இளசுகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தில் சாதனை படைத்த சீனியர்களை புரட்டியெடுத்து வருகின்றனர்.  இதற்கு முதன்மையான ஆதாரம் சமீபத்தில் நிறைவு பெற்ற பிரெஞ்சு ஓபன் தொடர் தான். கடினமான களிமண் தரையில் போதிய அனுபவம் இல்லாமல் இளசுகள் மிரட்டிய காட்சிகளை இன்னும் டென்னிஸ் உலகில் பரபரப்பான செய்தியாக தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.