games

img

டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவிப்பு  

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியை மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஜன.19 (புதன்கிழமை) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா, நான் இந்த ஆண்டை தொடங்கியபோது அல்லது டிசம்பரில் கூட இது எனது கடைசி சீசனாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னால் இந்த சீசனை முடிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் நான் முழு சீசனையும் விளையாட விரும்புகிறேன். எனது உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்று என் முழங்கால் மிகவும் வலிக்கிறது. நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் வயதாகி வருவதால் குணமடைய நேரம் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

சானியா மிர்சா மற்றும் அவரது இரட்டையர் பார்ட்னர் உக்ரைனின் நதியா கிச்செனோக் ஆகியோர் மகளிர் போட்டியின் முதல் சுற்றில் தமரா ஜிடான்செக் மற்றும் காஜா ஜுவானிடம் தோல்வியடைந்தனர். ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 4-6,6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.  

35 வயதுடைய சானியா, இரட்டையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரராகவும், ஒற்றையர் பிரிவில் 27-ஆவது தரவரிசையிலும் சிறந்து விளங்கினார். தற்போது உலக தரவரிசையில் 68வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;