நார்வே நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரின் “குரூப் ஏ” பிரிவில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். கடைசி (9ஆவது) சுற்றில் பிரக்ஞானந்தா இந்தியாவின் பிரணீத்தை 49-ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார். தான் பங்கேற்ற 9 சுற்றில் 6 வெற்றி, 3 டிரா செய்த பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.