games

img

செஸ் உலகக் கோப்பை போட்டி: பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி

அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில் 5-4 புள்ளிகள் பெற்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியைத் தமிழக வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். பெரும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிப்பெற்றார்.

இதையடுத்து உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.