இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வ தேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44-வது சீசன் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள் ளது. இரண்டு வாரங் களுக்கு நடைபெறும் இந்த தொடரில் 190 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பரத் சிங் சவுகான் செஸ் ஒலிம்பி யாட் தொடர் பற்றியும் அதன் செலவு (சராசரி யாக ரூ.75 கோடி) பற்றியும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி யிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்தியாவின் செஸ் தலைநகரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்து வதை எண்ணி மகிழ்கிறேன். தமிழ்நாட்டுக்குப் பெரு மிதமான தருணம். உல கிலுள்ள ராஜா, ராணிக் களை சென்னை அன்புடன் வரவேற்கிறது”என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுதொடர் பாக காணொளி ஒன்றை யும் தமிழ்நாடு அரசு சார்பில் டுவிட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நல்வாய்ப்பு
43-வது சீசன் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஆன்லைன் வழியாக நடைபெற்ற ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவும் ரஷ்யாவும் கோப்பையைப் பகிர்ந்துகொண்ட நிலையில், 44-வது சீசன் ரஷ்யாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்தியாவில் நடத்த சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்தது. சென்னை, தில்லி, ஒடிஷா ஆகிய நகரங்களில் நடத்த முடிவெடுத்திருந்த நிலையில், இறுதியாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.